27
June, 2026

A News 365Times Venture

27
Saturday
June, 2026

A News 365Times Venture

`மாநில அரசு, மத்திய அரசின் விளம்பர தூதர்கள்போல செயல்பட இயலாது' – மதுரையில் பினராயி விஜயன் பேச்சு

Date:

“கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை அதிகரித்து வருவது மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது..” என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியுள்ளார்.

மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன்

மதுரையில் நடந்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வாக ‘கூட்டாட்சிக் கோட்பாடே இந்தியாவின் வலிமை’ என்ற சிறப்புக் கருத்தரங்கம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சி ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக அமைச்சர் சுதாகர் ஆகியோர் பங்கேற்றனர்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசும்போது, “இந்த மாநாட்டில் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கூட்டாட்சி தத்துவம் பாதுகாக்கப்படுவது மிகவும் முக்கியமானது, அது குறித்து பேசுவதும் முக்கியமானது.

2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் அளிக்கப்பட்ட சர்க்காரியா குழுவின் அறிக்கையில் பல நல்ல முன்மொழிவுகள் இருந்தும் அவை எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

கூட்டாட்சி தத்துவம், நிதி அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படைக் கட்டமைப்பு ஆகும். மாநில அரசு, மத்திய அரசின் விளம்பரதாரர்கள்போல செயல்பட இயலாது, இது கூட்டாட்சி தத்துவத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது. இந்த நடவடிக்கைக்கு எதிராக நம்முடைய குரலை உயர்த்த வேண்டும்.

ஜிஎஸ்டி வரியை பொறுத்தவரை மாநிலங்களுக்கு உரிய நியாயம் வழங்கப்படுவதில்லை. மத்திய அரசு பொது விதிகளை உருவாக்கினாலும் அதனை சுமப்பது மாநில அரசுகள்தான். மத்திய அரசு தொடர்ச்சியாக மிகவும் வசதியானவர்களுக்கான சலுகைகளை வழங்கி வருகிறது.

மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன்

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை அதிகரித்து வருவதால் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மாநில அரசுகள் நிறைவேற்றி அனுப்பும் சட்டங்களை காரணமே இல்லாமல் மத்திய அரசு கிடப்பில் போடுகிறது. இது ஜனநாயகத்திற்கு விரோதமான நடவடிக்கை. மாநில அரசின் பெரும்பாலான விஷயங்களுக்கு உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது

உயர் கல்வி, மாநில அரசுகள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னையாக உள்ளது. சங் பரிவார அமைப்புகள் உயர் கல்வி நிலையங்களில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்குகின்றன.

உயர் கல்வி அமைப்புகளுக்கு முறையான நிதி வழங்கப்படுவதில்லை, மாநில பல்கலைக்கழகங்களில் மாநில அரசோடு விவாதிக்காமல் துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். ஒரே நாடு, ஒரே தேர்தல் எனும் நடைமுறையை கொண்டுவர மத்திய அரசு சட்ட மசோதாக்களையும் நிறைவேற்றி வருகிறது.

தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மாநில அரசுகளின் ஆலோசனைகளை பெறாமல் செய்யப்படுகிறது. இதனால் நாடாளுமன்றத்தில் பெரிய அளவுக்கு தென் மாநிலங்களின் பிரதிநிதத்துவம் குறையும். தொகுதிகளை குறைக்கும் முயற்சியால் உரிமைகளை, தேவைகளை பெறுவதில் சிக்கல் எழும் நிலை உருவாகும்.

கூட்டாட்சி தத்துவம், ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். இது போன்ற மாநாடுகள் பொதுமக்களுக்கான புரிதலை அதிகப்படுத்தும் என நம்புகிறேன்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தனியார் பள்ளிகள் சங்க தலைவர் பி.டி.அரசகுமார் மீது வழக்கு பதிவு: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை!

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் (பதிவு செய்யப்படாத அமைப்பு) நிறுவனர் தலைவரான...

Congress: மாணிக்கம் தாகூர் தலைவராக நியமனம்; தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் அதிரடி மாற்றம்!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் செல்வப்பெருந்தகை...

`மாணவர்களுக்கும் ஃபீலிங்ஸ் இருக்கு' – சாதி பெயருடன் ஐ.டி கார்டு விவகாரம்; விளக்கமளித்த செங்கோட்டையன்

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சாதி...

"மாணவர்கள் அனைவரும் சமம்!" – பள்ளி ID கார்டுகளில் சாதி பெயர் சர்ச்சை குறித்து செங்கோட்டையன் விளக்கம்

நேற்று (ஜூன் 26, 2026) ஈரோடு கோபி செட்டிபாளையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய...