2
September, 2026

A News 365Times Venture

2
Wednesday
September, 2026

A News 365Times Venture

“பால் கொள்முதல் விலையேற்றம் போதாது!” – கொதிக்கும் பால் உற்பத்தியாளர்கள்… திகைக்கும் அரசு!

Date:

ஆவின் பால் கொள்முதல் விலையை, அடுத்தடுத்து இரண்டு முறை உயர்த்தியிருக்கும் சூழலிலும் ‘விலையேற்றம் போதாது’ எனக்கூறி பால் உற்பத்தியாளர்கள் பொங்கிவருவது தமிழக அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது!

கடந்த 2022-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியின்போது, ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 4 ஆண்டுகளாக விலை உயர்த்தப்படவில்லை.

இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசு, கடந்த 19-8-2026 அன்று ‘ 4.3% கொழுப்பு சத்து மற்றும் 8.2% இதர சத்துகள் அடங்கிய ஒரு லிட்டர் பாலுக்கு தற்போது ரூ.38 வழங்கப்பட்டு வருகிறது. இனி லிட்டர் ஒன்றுக்கு கூட்டுறவு சங்கம் மூலம் கூடுதலாக ஒரு ரூபாயும் அரசு ஊக்கத் தொகையாக கூடுதலாக இரண்டு ரூபாயும் சேர்த்து, ரூ.41 என்ற விலையில் பால் கொள்முதல் செய்யப்படும்” என்று அறிவித்தது.

பால் கொள்முதல்

ஆனால், இந்த விலையேற்றம் போதாது எனக்கூறி, பால் உற்பத்தியாளர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, கடந்த 31-8-2026 அன்று மீண்டும் லிட்டருக்கு ரூ.3 என்ற அளவில் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது தமிழக அரசு. இதனால் பால் கொள்முதல் விலை ரூ.44-ஆக உயர்ந்துள்ளது. ஆனால் ‘இந்த விலையேற்றமும் போதாது’ எனக்கூறி தொடர்ந்து எதிர்ப்புக்குரல் எழுப்பி வருகின்றனர் பால் உற்பத்தியாளர்கள்.

இதையடுத்து, ‘என்னதான் பிரச்னை…?’ என்ற கேள்வியோடு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெருமாளிடம் பேசியபோது, “10 லிட்டர் பால் கொடுக்கக்கூடிய ஒரு மாட்டுக்கு தீவனம் உள்ளிட்ட இடுபொருட்களுக்கான செலவு மட்டுமே 420 ரூபாய் ஆகிறது என்று ஆவின் அதிகாரிகளே புள்ளிவிவரங்கள் வைத்துள்ளனர்.

விஜய்
விஜய்

எனவேதான் ‘ஒரு லிட்டருக்கான கொள்முதல் விலையை 50 ரூபாயாக உயர்த்த வேண்டும்; அரசின் ஊக்கத்தொகையாக 10 ரூபாய் வழங்க வேண்டும்; மாட்டுத் தீவனத்தின் விலையில் 50% மானியமாக வழங்கவேண்டும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் பல வருடங்களாக போராடி வருகிறோம்.

ஆனால், தமிழக அரசோ லிட்டருக்கான கொள்முதல் விலையை மட்டும் ரூ.44 என்று உயர்த்தியுள்ளது. ‘கொள்முதல் விலை, ஊக்கத்தொகை என மொத்தமாக ஒரு லிட்டர் பாலுக்கு 20 ரூபாயாக உயர்த்தித் தரவேண்டும்’ என்ற எதிர்பார்ப்பில் இருந்த பால் உற்பத்தி விவசாயிகளுக்கு, அரசின் இந்த அறிவிப்பு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

இப்போதும்கூட பால் விவசாயிகள் அனைவருக்கும் 44 ரூபாய் கிடைத்துவிடாது. ஏனெனில், அரசு அறிவித்திருக்கிற இந்த விலை உயர்வு என்பது, 4.3% கொழுப்பு சத்து, 8.2% இதர சத்துகள் அடங்கிய பாலுக்கு மட்டும்தான்.

தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் 90% பாலில், இந்த விகிதாச்சாரத்தில் பால் கிடைக்காது. எனவே, பாலின் தரத்தைப் பொறுத்து 2 அல்லது 3 ரூபாய் குறைத்துதான் தருவார்கள். அந்தப் பணத்தையும் வாரம் தோறும் பட்டுவாடா செய்யமாட்டார்கள். மாதக்கணக்கில் இழுத்தடிப்பார்கள்.

இதுவே தனியார் பால் நிறுவனங்கள், ஆவினை விடவும் லிட்டருக்கு 10 ரூபாய் அதிகம் விலை கொடுத்து கொள்முதல் செய்கின்றனர். பாலின் தரத்துக்கு ஏற்ற விலை நிர்ணயம் என்பதும் அவர்களிடம் கிடையாது. அடுத்து, வாரம்தோறும் பணப் பட்டுவாடா செய்துவிடுகின்றனர். எனவே, ஆவினுக்கு வரவேண்டிய பால் அனைத்தும் தனியார் நிறுவனங்களுக்குத்தான் செல்கிறது. இதனால்தான் பொதுமக்களுக்குத் தேவையான அளவில் பால் வழங்க முடியாமல் ஆவின் நிறுவனம் திண்டாடி வருகிறது” என்றார் ஆதங்கத்துடன்.

இவ்விவகாரத்தில் ஆவினின் நடைமுறை சிக்கல்கள் குறித்துப் பேசுகிற ‘தென்னிந்திய பால் போக்குவரத்து சங்க’ தலைவர் வைத்தியநாதன், “மகாராஷ்டிராவில் ஒரு லிட்டர் பால் 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொள்முதல் விலை 67 ரூபாய்க்கும் அதிகமாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டிலோ அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் என அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கூடுகிறதே தவிர… பால் விற்பனை விலையோ, கொள்முதல் விலையோ யானைப் பசிக்கு சோளப் பொரி கொடுத்த கதையாக மட்டுமே உயர்கிறது.

ஏற்கெனவே ஆவின் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில், இப்போது அதிகரிக்கப்பட்டிருக்கும் 6 ரூபாயையும் அரசே நேரடியாக பால் சொஸைட்டிக்கு வழங்க வேண்டும். அதையும் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு ஒருமுறையாவது பட்டுவாடா செய்யவேண்டும்.” என்கிறார்.

இவ்விவகாரம் குறித்து விளக்கம் கேட்பதற்காக ஆவின் நிர்வாக இயக்குநர் அஜித் யாதவ், பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமியைத் தொடர்புகொண்டோம். இருவருமே நமது அழைப்பை ஏற்கவில்லை! இதைத்தொடர்ந்து அமைச்சரின் உதவியாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “அமைச்சர் சட்டமன்றத்தில் பேசியதையே பதிலாக போட்டுக்கொள்ளுங்கள்” எனக்கூறி இணைப்பைத் துண்டித்துக்கொண்டார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Iran War: தாக்கிய அமெரிக்கா; `வருந்துவீர்கள்' – ஈரான் பதிலடி; மீண்டும் பதற்றம் அதிகரிப்பு!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் நேரடி மோதல்கள் வெடித்துள்ளன, இரு...

மேட்டூர் அணையைத் திறந்து வைத்தார் முதல்வர் விஜய்! – புது வெள்ளத்துக்கு மலர் தூவி மரியாதை!

தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கக்கூடிய மேட்டூர் அணையை தமிழக முதல்வர்...

GDP வளர்ச்சியுடன் அரசியல் பதிலடி… ‘Jhooth Ki Goonj’ என்ற பிரதமர் மோடி! பின்னணி என்ன?

இந்தியாவின் பொருளாதாரம் 7.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக வெளியான புதிய ஜி.டி.பி...

நேபாளம்: "கற்பனை செய்து பார்ப்பதற்குக்கூட பயமாக இருக்கிறது" – மீண்டு வந்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?

கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மானசரோபர் பயணம் சென்ற 28 பேர்,...