9
August, 2026

A News 365Times Venture

9
Sunday
August, 2026

A News 365Times Venture

’பாட்டிலுக்கு பத்து ரூபாயை ஒழிப்பதற்கே ஆன்லைன் பரிவர்த்தனை’ – அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!

Date:

கோவை விமான நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “டாஸ்மாக் கடைகளில் கூடுதல் பணம் வசூலித்தால் காவல் துறை வழக்குப்பதிவு செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதை பார்த்தேன். இன்னும் அது தொடர்பாக முழுமையாக படிக்கவில்லை. அதை பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன். வெளிநாட்டு மதுபானங்கள் ஏற்கனவே மதுபான கடையில் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்த துறையில் யாரும் மோனோ போலியாக இருக்கக் கூடாது. வாடிக்கையாளர்கள் என்ன விரும்புகின்றனரோ, அது கொடுக்க வேண்டியது கடமை.

ஏற்கனவே பட்வைசர் பீர் குறித்து கேட்டார்கள். பாஸ்டர்ஸ் சரக்கு கோரிக்கை குறித்து பரீசிலிக்கப்படும். இன்று சட்டமன்றத்தில் ஆன்லைன் முறை குறித்து விளக்கமாக பேசியிருக்கிறேன். பண பரிவர்த்தனை இருக்கக்கூடாது என்பதற்காக இந்த ஆன்லைன் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே ஸ்கேன், ஜி பே போன்றவை இருந்தும் பத்து ரூபாய், இருபது ரூபாய் பிரச்சனை இருந்தது. அது இருக்கக் கூடாது என்பதற்காக இந்த ஆன்லைன் நடைமுறை கொண்டுவரப்பட்டிருக்கிறது. இது இன்று முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது. இன்று ஆன்லைன் புக்கிங் ஒர்க்கிங்கில் இருந்தது. இன்று மட்டும் 700 பேருக்கும் மேல் ஆர்டர் செய்து வாங்கி இருக்கின்றனர். ஆர்டர் செய்வதிலும் சில பிரச்சனைகள் இருக்கிறது. இது ஒரு முயற்சி. இதில் என்னென்ன பிரச்சனைகள் வருகின்றது என கவனிக்கிறோம்.

விக்னேஷ்

இது குடிப்பவர்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுப்பது கிடையாது. ஜிபே பண்ணுவதற்கு ஒரு நேரமாகும் அந்த நேரத்தை குறைத்து இருக்கிறோம். பில் வேண்டும் என கேட்கிறார்கள். அதற்கான ஒரு வாய்ப்பு. க்யூ ஆர் கோட் காட்டினால்தான் என்ன ஆர்டர் பண்ணி இருக்கின்றனர் என்பதே தெரியும். ஆன்லைனில் மதுவகைகளை  தேடிப் பார்த்து வாங்குவது, வேண்டும் என்கிற மதுவை வாங்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். சில கடைகளில் சில பிராண்ட் சரக்குகள் மட்டுமே விற்கின்றனர். சில சரக்குகளை மட்டும் விற்க முயற்சிக்கின்றனர். அந்த புகார்களின் அடிப்படையில் ஆன்லைன் முறை  கொண்டு வரப்பட்டது.

எந்தெந்த கடையில் என்னென்ன மது வகைகள் இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளலாம். வாடிக்கையாளர்களாக பார்க்கும் போது, என்னென்ன பிராண்ட் இருக்கின்றது என சொல்ல வேண்டியது கடைநடத்துபவர்களின் பொறுப்பு. என்னென்ன சரக்கு இருக்கிறது என வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்கிறார்கள். கடந்த காலங்களில் இந்த துறையை சரிப்படுத்த முயற்சி எடுக்கவில்லை. நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம். வசதி ஏற்படுத்துவது குடிப்பதை ஊக்குவிப்பது கிடையாது” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டிற்கு ஏன் ஆபத்து? – மாணிக்கம் தாகூரின் 5 விளக்கங்கள்|MODI-LIMITATION

தொகுதி மறுவரையறை பேச்சு மீண்டும் எழுந்துள்ளது. கூடவே அதற்கான எதிர்ப்புகளும், கண்டனங்களும்...

"திமுக அரசுக்குப் போட்டியாக தவெக அரசும் துரோகம் செய்திருக்கிறது" – மின் இணைப்பு குறித்து அன்புமணி

தட்கல் திட்டத்தில் வேளாண் மின் இணைப்புக்கு விண்ணப்பித்த 60 ஆயிரம் விவசாயிகளுக்கு...

"தொகுதி மறுவரையறையில் திமுகவை பாஜக ஏமாற்றுகிறது" – கார்த்தி சிதம்பரம் சொல்லும் விளக்கம் என்ன?

தொகுதி மறுவரையறையில் திமுகவை பாஜக தவறாக வழிநடத்துவதாக மக்களவை உறுப்பினர் கார்த்தி...

சுதந்திர தின விழா வினாடி-வினாவில் சாவர்க்கர் குறித்த கேள்வி; கேரள கல்வித்துறையில் சர்ச்சை

கேரள மாநிலம் காசர்கோடு, மஞ்சேஸ்வரம் மற்றும் கும்பளா ஆகிய கல்வித் துணை...