14
August, 2026

A News 365Times Venture

14
Friday
August, 2026

A News 365Times Venture

பழனி நிலமோசடி விவகாரம்: "அன்வர்தீன் மரணத்தை அரசியலாக்க வேண்டாம்"- நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வாதம்

Date:

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வேணுகோபால், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்தின் அறங்காவலர் அன்னபூரணி சிவக்குமார், திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி பிரதீப் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் தனித்தனியே மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

அதில், “பழனி அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 1.35 ஏக்கர் நிலம் முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற மதுரை அமர்வை அணுகி, மடத்தை எதிர்மனுதாரராகச் சேர்க்காமல் உண்மை விபரங்களைத் மறைத்து உத்தரவு பெற்று முருகதாஸ் என்பவர் வெள்ளைத்துறை மற்றும் சேதுபதி பெயரில், பத்திரப்பதிவு செய்துள்ளார்.

இந்த விவகாரத்தில் வழக்கமான பதிவாளர், அலுவலக உதவியாளர், மாவட்ட பதிவாளர், கூடுதல் பொறுப்பு வைத்து ஆவண எண் ஒதுக்கிய பதிவாளர் என அனைத்து அதிகாரிகள் மீதும் முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டி உள்ளது.

அன்வர்தீன்

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை விசாரிக்க போதுமான முகாந்திரம் உள்ளது. எனவே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க  இடைக்கால தடை விதிப்பதோடு, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, பாதுகாக்கவும், வழக்கை சிபிஐக்கு மாற்றியும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உயிரிழந்த வழக்கறிஞர் மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனவே இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்” என வாதிட்டார்.

நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்றம் உத்தரவு

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். வழக்கு உரிய ஆவணங்கள் ஆதாரங்கள் அடிப்படையில்தான் விசாரணை நடைபெற்று கைது நடவடிக்கைகள் நடைபெறுகிறது. மேலும் இதற்கான சதி திட்டம் கடந்த மார்ச் மாதமே தொடங்கியது” என வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், பழனி தண்டாயுதபாணி கோவில் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தூய்மைப்படுத்தும் சடங்கு: “என்னை அவமானப்படுத்த முயன்றுள்ளீர்கள்" – மல்லிகார்ஜுன கார்கே உருக்கம்!

கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரகாண்ட்...

'எங்களை விட்டுருங்க' – 3 பில்லியன் டாலர், 2 டன் தங்கத்தை வழங்கி ஈரானைச் சமானப்படுத்திய UAE

இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து கடந்த பிப்ரவரியில் இருந்து ஈரான் மீது தாக்குதல்...

₹ 1.5 லட்சம் லஞ்சமா? முதல்வர் முன் அழுத தேக்வாண்டோ மாணவி; பின்னர் வீடியோவில் வேறு விளக்கமா?

உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் நடைபெற்ற மாணவர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில்,...

'சிங்கப்பூர் பயணத்துக்கு அப்புறம்தான்..!' அவையில் பம்மும் எ.வ.வேலு; அதிருப்தியில் திமுக MLA க்கள்?

சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. செப்டம்பர் 8 வரை அவை...