4
May, 2026

A News 365Times Venture

4
Monday
May, 2026

A News 365Times Venture

'நான் பிரபாகரனை சந்திக்கவே இல்லை… அந்த போட்டோவில் இருப்பதும் நான் இல்லை' – சீமான் சொல்வதென்ன?

Date:

இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள். திமுகவையும் சேர்த்து நாங்கள் தான் வளர்க்கிறோம்.

சீமான்

பெரியாரை விமர்சித்து அண்ணா, கருணாநிதி பேசி உள்ளனர். திகவில் இருந்து திமுக பிரிய காரணம் என்ன? பெரியாரை‌ எதிர்த்து அண்ணா பேசினார். பெரியாரை விமர்சித்து கருணாநிதி பேசியதில் ஒரு துளி கூட நான் பேசவில்லை.

`யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை’

நான் பிரபாகரனின் ரத்த உறவு அல்ல, லட்சிய உறவு. அவரது லட்சியத்துக்காக நாங்கள் தான் நிற்கிறோம். பிரபாகரனின் அண்ணன் மகனுக்கு உலகம் முழுவதும் உள்ள சொந்தங்கள் பதில் சொல்வார்கள். ஒருவர் நான் பிரபாகரனை சந்திக்கவில்லை என்கிறார். மற்றொருவர் 8 நிமிடம் தான் சந்தித்தேன் என்று கூறுகிறார்.‌

சீமான் – கேப்டன் பிரபாகரன்

ஒருவர் போட்டோ எடிட் செய்ததாக கூறுகிறார். நானே சொல்கிறேன் பிரபாகரனை சந்திக்கவே இல்லை. இப்போது எதை நம்புவீர்கள். பிரபாகரன் உடன் எடுத்த போட்டோ உண்மை என்று யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.

அந்த  போட்டோவில் இருப்பது நானே இல்லை என்கிறேன். வேறு ஏதாவது கேள்வி கேளுங்கள். ஈரோடு தேர்தலில் நல்ல ஆண்மகனாக இருந்தால் சீமானுக்கு ஓட்டு போட வேண்டாம் என சொல்ல வேண்டும். பெரியார் திராவிடத்தின் குறியீடு, பிரபாகரன் தமிழின் அடையாளம். பெரியார் ஒழிக என்பது என் கோட்பாடு அல்ல.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு

பிரபாகரன் வாழ்க என்பது தான் என் கோட்பாடு. தீவிரவாதி என்று சொல்லும் பிரபாகரனை பற்றி பேசி 30 லட்சம் வாக்குகளை வாங்கி மூன்றாவது சக்தியாக வந்துள்ளேன்.சூரியன் உதித்தால் தான் விடிவு வரும். ஈரோடு கிழக்கில் சூரியன் மறைந்தால் தான் தமிழகத்திற்கு விடிவு வரும்.” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"6 பேரில் நானும் ஒருத்தி… ஏதாவது நடந்தால் பாஜக அரசுதான் பொறுப்பு"- மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங் இருந்தபோது,...

'கேரள முதல்வர்' என்பதை ஃபேஸ்புக் பயோவில் இருந்து நீக்கிய பினராயி விஜயன்! – விவாதமும், விளக்கமும்!

கேரள மாநில முதல்வராக 2016-ம் ஆண்டு முதல் பினராயி விஜயன் இருந்து...

TN Election Results: ஆட்சிக் கட்டிலில் அமரப் போவது யார்? – நாளை காலை தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை! | Live Updates

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - தேசிய அளவில் உற்றுநோக்கப்படும் ஒன்றாக...