10
July, 2026

A News 365Times Venture

10
Friday
July, 2026

A News 365Times Venture

`நடுநிலைப் பள்ளிகளில் 0% Dropout Rate; தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அபாரம்!' – UDISE அறிக்கை விவரம்

Date:

மத்திய கல்வி அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ள 2025-2026 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பின் (UDISE) புதிய அறிக்கையில், மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் இருப்பு, உள்கட்டமைப்பு மற்றும் கல்வித் தரம் எனப் பள்ளிக் கல்வியின் அனைத்து முக்கியக் குறியீடுகளிலும் தமிழ்நாடு தேசிய சராசரியை விட மிகச் சிறந்த இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

மத்திய கல்வி அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ள 2025-2026-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பின் (UDISE) புதிய அறிக்கையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தேசிய அளவில் மாபெரும் சாதனை படைத்துள்ளது தெரியவந்துள்ளது.

மாணவர் பங்கேற்பு, பள்ளிகளில் மாணவர்களைத் தக்கவைத்தல், ஆசிரியர்கள் இருப்பு, பள்ளி உள்கட்டமைப்பு மற்றும் கல்வித் தரம் எனப் பள்ளிக் கல்வியின் அனைத்து முக்கியக் குறியீடுகளிலும் தமிழ்நாடு தேசிய சராசரியை விடக் கணிசமான அளவில் சிறப்பாகச் செயல்பட்டு முதலிடத்தில் உள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்கள்

மேலும் அந்த அறிக்கையில், இந்தியாவின் ஒட்டுமொத்தப் பள்ளிகளில் 3.9 சதவீதப் பள்ளிகளை மட்டுமே கொண்டுள்ள தமிழ்நாடு, நாட்டின் ஒட்டுமொத்தப் பள்ளி மாணவர்களில் 5 சதவீத மாணவர்களுக்கு மிகச் சிறப்பான முறையில் கல்வியளித்து வருகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் மற்ற மாநிலங்களை விடப் பெரியதாகவும், அங்குள்ள கல்வி உள்கட்டமைப்புகள் மிகச் சரியான முறையிலும், திறம்படவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர் சேர்க்கை விகிதமானது (GER) ஆரம்பக் கல்வி முதலே மிக உயர்வாக நீடித்து வருகிறது. தொடக்கப் பள்ளி அளவில் மாணவர் சேர்க்கை 92 சதவிகிதமாகவும், நடுநிலைப் பள்ளி அளவில் (Upper Primary) 95 சதவிகிதமாகவும் உள்ளது. நடுநிலைப் பள்ளி சேர்க்கையானது கடந்த ஆண்டின் 98 சதவிகிதத்திலிருந்து சற்றே குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், உயர்நிலைப் பள்ளி அளவில் (Secondary) மாணவர் சேர்க்கை 97 சதவீதமாக உயர்ந்துள்ளதுடன், மேல்நிலைப் பள்ளி அளவில் (Higher Secondary) 85 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள்

தமிழ்நாடு கல்வித் துறையின் மிக முக்கிய மைல்கல்லாக, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி அளவுகளில் பள்ளி விலகல் (Dropout Rate) விகிதம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, 0% (பூஜ்ஜியம்) என்ற வரலாற்றுச் சாதனை தக்கவைக்கப்பட்டுள்ளது. மேலும், உயர்நிலைப் பள்ளி அளவில் பள்ளி விலகல் விகிதம் வெறும் 6.2 சதவீதமாக மட்டுமே உள்ளது. இது தேசிய சராசரியான 9.5 சதவீதத்தை விடப் பல மடங்கு மிகக் குறைவாகும்.

மாணவர்களைப் பள்ளியில் தக்கவைக்கும் விகிதத்தைப் பொறுத்தவரை, தொடக்கப் பள்ளியில் 94 சதவீதமாகவும், எட்டாம் வகுப்பு வரை 96 சதவீதமாகவும் இருந்து, மேல்நிலைப்பள்ளிக்கு வரும்போது 75.9 சதவீதமாகக் குறைகிறது.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை விடத் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருக்கும் தேசிய அளவிலான போக்கே இங்கும் எதிரொலித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை விடத் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 18 லட்சம் அதிகமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி, தனியார் பள்ளிகளில் 62 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களும், அரசுப் பள்ளிகளில் 43 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களும் பயின்று வருகின்றனர். இது தவிர, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 18 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்து தங்களது கல்வியைத் தொடர்வதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கரூர்: விறுவிறுப்பான ஏற்பாடுகள், பலத்த பாதுகாப்பு; முதல்வர் விஜய்யின் வருகையால் தொண்டர்கள் உற்சாகம்! | Live

3 பள்ளிகளுக்கு விடுமுறைமுதலமைச்சர் விஜய், இன்று கரூர் செல்லும் நிலையில் மக்கள்...

இபிஎஸ் தலைமையிலான கூட்டத்தைப் புறக்கணித்த பாலக்கோடு எம்எல்ஏ கே.பி.அன்பழகன்; காரணம் என்ன?

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல்...

கரூர் துயரம்: "இழப்பை ஈடுகட்ட வேண்டியது தவெகதான்; அரசு அல்ல"- அரசுப் பணிக்கு சிபிஐ எம்.பி. எதிர்ப்பு

நாளை (ஜூலை 10) கரூர் செல்லும் முதல்வர் விஜய், கூட்டநெரிசலில் சிக்கி...