2
March, 2026

A News 365Times Venture

2
Monday
March, 2026

A News 365Times Venture

"துரையும் சத்யாவும் மனம் திறந்து பேசுனாங்க; இனி.." – மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்துக்குப் பின் வைகோ

Date:

ம.தி.மு.க கட்சியின் முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக திருச்சி எம்.பி.யும் வைகோவின் மகனுமான துரை வைகோ நேற்று( ஏப்ரல் 19) அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

துரை வைகோவுக்கும், கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே ஏற்படும் கருத்து மோதல்களால்தான் துரை வைகோ ராஜினாமா செய்கிறார் என்று தகவல்கள் வெளியானது.

மதிமுக

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 20) ம.தி.மு.க நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக்குப் பிறகு ம.தி.மு.க முதன்மைச் செயலர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்த துரை வைகோ தமது முடிவை வாபஸ் பெற்றிருக்கிறார்.

நிர்வாகக்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய வைகோ, “நான் எடுத்த முடிவைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என்று இந்தக் கூட்டத்தில் துரை வைகோ கூறினார். மல்லை சத்யாவும்- துரை வைகோவும் பரஸ்பரம் பேசிக்கொண்டார்கள்.

இருவரும் மனம் திறந்து பேசினார்கள். உள்ளம் திறந்து பேசினார்கள்.

தங்கள் உணர்வுகள் ஆவேசத்தின் வடிவில் வந்த வார்த்தைகள் போன்றவற்றை இருவருமே நாகரிகமான முறையில் கையாண்டார்கள்.

கட்சிக்கும், முதன்மைச் செயலாளருக்கும் இனி உறுதுணையாக செயல்பாடுவேன் என்று மல்லை சத்யா அவர்கள் கூறியிருக்கிறார்.

மதிமுக
மதிமுக

துரை வைகோ அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டு ஒற்றுமையாக இருந்து இந்த இயக்கத்தை வலுப்படுத்துவோம் என்று சொன்னதோடு மட்டும் அல்லாமல், ‘நடந்து முடிந்தது, முடிந்ததாகவே இருக்கட்டும். இனி நடப்பவைகள் நல்லதாக நடக்கட்டும்’ என்று கூறினார்.

இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு நாங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்ற சமிக்ஞையை நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்குத் தெரிவித்தார்கள்.

எனது வலது பக்கத்தில் துரை துரைவைக்கோவும், இடது பக்கத்தில் மல்லை சத்யாவும் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"விவசாயிகள் விளைவித்துள்ள பயிர் மீது திமுக அரசுக்கு அக்கறை இல்லை.!" – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டம், புகழூர் வாய்க்காலில் அடைக்கப்பட்டுள்ள பகுதியை விவசாய சங்க பிரதிநிதிகள்...

DMK : 'பௌர்ணமி தினத்தில் அறிவாலயத்தில் கூடிய அமைச்சர்கள்; போக்குவரத்து நெருக்கடியில் அண்ணா சாலை!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு விநியோகம் ஜரூராக நடந்துகொண்டிருக்கிறது. பெளர்ணமி...

படுவைரலான சவால்; கே.சி.வீரமணியால் பின்வாங்கும் தேவராஜி; பிடிகொடுக்காத எ.வ.வேலு- ஜோலார்பேட்டை சடுகுடு

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் தி.மு.க மாவட்டச் செயலாளரான க.தேவராஜி, சிட்டிங்...

ஈரான் : காமேனி மரணம் – மௌனம் காக்கும் இந்தியா | காரணம் என்ன?

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகிறது. ஈரானின்...