17
March, 2026

A News 365Times Venture

17
Tuesday
March, 2026

A News 365Times Venture

துபாயிலிருந்து தங்கம் இறக்குமதி செய்ய புதிய கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசு – ஏன் தெரியுமா?

Date:

துபாயில் இருந்து தங்கம் இறக்குமதி செய்வது சம்பந்தமாக புதிய விதிகளை விதித்துள்ளது மத்திய அரசு.

அதன் படி, இந்தியா – ஐக்கிய அரபு அமீரக விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தின் (CEPA) கீழ், முகவர் நிறுவனங்கள், தகுதிவாய்ந்த நகைக்கடைக்காரர்கள் மற்றும் கட்டண விகித ஒதுக்கீடு (TRQ) வைத்திருப்பவர்கள் மட்டுமே இனிமேல் துபாயிலிருந்து தங்கம் இறக்குமதியை செய்ய முடியும்.

இந்தக் கட்டுப்பாடுகள் வெட்டப்படாத, பகுதியளவு பதப்படுத்தப்பட்ட, தூளாக உள்ள தங்கம் மற்றும் வெள்ளிகளுக்குப் பொருந்தும்.

துபாய்

சி.இ.பி.ஏ-ன் கீழ், பலர் சட்டவிரோதமாக, தங்கத்தைப் பிளாட்டினம் என்று கூறி இந்தியாவிற்குள் இறக்குமதி செய்து வந்தனர். இதைத் தடுக்கவே, இப்போது இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

இனி, சி.இ.பி.ஏ-ன் கீழ், பிளாட்டினத்தை இறக்குமதி செய்ய ஒத்திசைவு நடைமுறை (Harmonised System) பின்பற்றப்படும். அதாவது, பிளாட்டின இறக்குமதிகளுக்கு ஒரு எண் வழங்கப்பட்டு, அதன் படி இறக்குமதி நடக்கும். இந்த நடைமுறை குறித்து கடந்த மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டிருந்தது.

இந்த ஒத்திசைவு நடைமுறை 99 சதவிகித அல்லது உயர் தர பிளாட்டின இறக்குமதிகளுக்குப் பின்பற்றப்படும்.

ஆக, இவைகளின் மூலம் மோசடி தங்கம் இறக்குமதியைத் தடுக்கமுடியும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஆளுநர் ரவி கொடுத்த லிஸ்ட்.! – மாற்றத்துக்குத் தயாராகும் தேர்தல் ஆணையம்!

ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதைத்...

`தத்துக்குழந்தையின் வயது எதுவாகினும் தாய்க்கு மகப்பேறு விடுப்பு உண்டு' – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

தத்தெடுக்கும் குழந்தையின் வயது எவ்வளவாக இருந்தாலும் தாய்க்கு மகப்பேறு விடுப்புக்கு உரிமை...

கரூர் : 2021-ல் 4/4 பெற்ற செந்தில் பாலாஜி; தவெக வருகைக்குப் பின்.! | இப்போது முந்துவது யார்?

முந்துவது யார்?பரபரப்புக்கு பஞ்சமில்லாத கரூர் மாவட்ட தேர்தல் களம்... அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி:பரப்பளவில்...

கன்னியாகுமரி: "மானம் உள்ளவர்கள் திமுக-வுக்கு ஓட்டு போடலாமா?" – ஆர்ப்பாட்டத்தில் கொந்தளித்த பொன்னார்!

தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்,...