21
July, 2026

A News 365Times Venture

21
Tuesday
July, 2026

A News 365Times Venture

திமுக எம்எல்ஏ கைது: “திமுக-வினரைத் துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கில்…" – ஆர்.எஸ். பாரதி கண்டனம்

Date:

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “எமர்ஜென்சியை எதிர்த்துப் போராடி சிறைச்சென்ற பாரம்பர்யம் கொண்ட தி.மு.க, இதுபோன்ற கைது நடவடிக்கைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஒருபோதும் அஞ்சாது.

ஜனநாயகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மை வேண்டும். தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்த இந்த 60 நாட்களிலேயே சகிப்புத்தன்மை அறவே இல்லை என்பதை நிரூபித்துவிட்டது.

பிற கட்சிகளில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்களது பக்கம் இழுக்கும் இந்த அரசு, தி.மு.க-வில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் வைரத்தைப் போன்ற உறுதிமிக்க தொண்டர்களாக இருப்பதால் அவர்களை மாற்ற முடியாது என்ற காரணத்தால், இது போன்ற கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

மார்க்கண்டேயன்

அனிதா ராதாகிருஷ்ணனைத் தொடர்ந்து இரண்டாவது எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டுள்ளதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தி.மு.க-வினரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே கைது செய்கிறார்கள். நீதிமன்றத்தின் மீது தங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இந்த விவகாரங்களைச் சட்டரீதியாக எதிர்கொள்ள தி.மு.க தயாராக இருக்கிறது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைப் பேண வேண்டிய காவல்துறை, அதற்கு நேரமில்லாமல் தி.மு.க-வுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவிடும் கல்லூரி இளைஞர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் நள்ளிரவில் சென்று அச்சுறுத்தி வருகிறது.

மேலும், ஊடக விமர்சகர் விஜயன் போன்றவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பது போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் இதுவரை கண்டிராத ஒன்றாகும்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

நட்டா உடன் CJP சந்திப்பு; அமித் ஷாவை சந்தித்த தர்மேந்திர பிரதான்! நடந்தது என்ன?

போராட்டம் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, காக்ரோச் ஜனதா கட்சி...

நாடாளுமன்றக் கூட்டத்தொடர்: 'இந்தியாக் கூட்டணி பேசப் போகும் பிரச்னைகள் என்னென்ன?' – கார்கே லிஸ்ட்

இன்று முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. ஏகப்பட்ட பிரச்னைகளுக்கு எதிராக...

மார்க்கண்டேயன் கைது: "அவங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?" – கீதா ஜீவன்

தூத்துக்குடியில் கடந்த 18 ஆம் தேதி தி.மு.க சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி...

“என்னை தவெக-வில் இணையச் சொன்னதே தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுதீர்தான்" – அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை தூத்துக்குடி மாவட்ட...