4
July, 2026

A News 365Times Venture

4
Saturday
July, 2026

A News 365Times Venture

'தவெகவின் குதிரை பேரத்தை பார்த்து ஆளுநர் அமைதியாக இருப்பது ஏன்?'- அதிமுக எம்.பி இன்பதுரை

Date:

சென்னை கிண்டியில் உள்ள லோக் பவனில் ஆளுநர் அர்லேகரை அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இன்பதுரை எம்.பி. உள்ளிட்டோர் சந்தித்து புகார் அளித்திருக்கின்றனர்.

குதிரை பேரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநரிடம் மனு அளித்திருக்கின்றனர்.

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

மனு அளித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அதிமுக எம்.பி இன்பத்துரை, ” எங்களின் புகாரில் ஆளுநர் உரிய நடடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.

தவெகவின் குதிரை பேரத்தை பார்த்து ஆளுநர் அமைதியாக இருப்பது ஏன்? அதை அனுமதிக்க மாட்டேன் என தவெக ஆட்சி அமைக்கும் முன்பே அவர் கூறியிருந்தார். ஆனால் இப்போது என்ன நடக்கிறது.

குதிரை பேரம் நடைபெறுவது அப்பட்டமாக தெரிந்தும் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார். குதிரை பேரம் மிகவும் ஆபத்தானது. அரசமைப்பு சட்டத்துக்கு புறம்பானது” என்று கூறியிருக்கிறார்.

அதிமுக கொறடா கிருஷ்ணமூர்த்தி
அதிமுக கொறடா கிருஷ்ணமூர்த்தி

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ” அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வழிகாட்டுதலில் ஆளுநரை சந்தித்துள்ளோம்.

அதிமுக எம்எல்ஏ-களை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது தவெக. ஆளுநரின் அதிகாரத்தின் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"Right Party, Wrong Leader"- அதிமுகவில் இருந்து விலகியது குறித்து வைகைச்செல்வன் விளக்கம்

அதிமுகவில் இருந்து விலகிய வைகைச்செல்வன் முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைந்திருக்கிறார்....

அணுக்கனிம சுரங்கத் திட்டம்: “உள்ளூர் மக்களிடம் கலந்தாலோசிக்காமல்…" – அமைச்சர் பிரபு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம (Atomic Minerals) சுரங்கத் திட்டத்திற்காக 1144.0618 ஹெக்டேர்...

"இது RSS-ன் வெறுப்பரசியல்" – விஸ்வநாதன் மீதான புகாருக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்

தமிழிக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை இன்று (ஜுலை.4) தமிழக பாஜக தலைவர்...

“லஞ்சம் வாங்கி நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள்; இதுதான் தூய சக்தி ஆட்சியா?" – டிடிவி தினகரன்

தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், அதன் ஆட்சி...