19
May, 2026

A News 365Times Venture

19
Tuesday
May, 2026

A News 365Times Venture

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை மூடல் – நிம்மதியடைந்த பொதுமக்கள்!

Date:

தமிழக அரசு, கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட உள்ளன.

அவற்றுள் மிகவும் கவனம் பெற்றது, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள டாஸ்மாக் கடை. நீண்டகாலமாக இக்கடை அப்பகுதி மக்களுக்கும் பெண்களுக்கும் பெரும் இடையூறாக இருந்து வந்தது.

பேருந்து நிலையம் என்பதால் இருபத்தி நான்கு மணி நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

ஆனால், மதுப் பிரியர்களின் செயல்களால், பெண்கள் அப்பகுதியில் நடந்து செல்லவே அஞ்சினர்.

இக்கடையை மூட வேண்டும் என்று பொதுமக்களும் பல்வேறு சமூக அமைப்புகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். ஆனால், யாரும் நடவடிக்கை எடுக்க முன் வரவில்லை. ஆறு மாதங்களுக்கும் மேலாக கோரிக்கைகள் தொடர்ந்த நிலையில், புதிய அரசின் உத்தரவுப்படி இக்கடைக்கு நிரந்தரப் பூட்டு விழுந்தது.

இது குறித்து அப்பகுதி வியாபாரிகளும் ஊழியர்களும் கூறுகையில், “ஒவ்வொரு நாளும் இந்த வழியில் மிகுந்த அச்சத்துடனேயே சென்று வந்து கொண்டிருந்தோம். இரவு நேரங்களில் குடிகாரர்களின் கூட்டத்தினூடே நடக்கவே முடியாது.

ஆபாசமான வார்த்தைகள், கேலிகள் என்று அருவருப்பாக இருக்கும். இப்போது இக்கடைக்கு பூட்டு விழுந்தது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதோடு நிறுத்திவிடாமல், தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களையும் ஒழித்தால், இந்த அரசுக்கு மக்கள் என்றென்றும் நன்றிக்கடன்பட்டிருப்பார்கள்!” என்று தெரிவித்தனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொல்லி வெளியேறியிருக்கலாம்!’ – திமுக – காங்கிரஸ் முறிவு குறித்து நாராயணசாமி

``தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்...!’புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நேற்று 17-ம் தேதி தன்னுடைய...

`இந்திய ரூபாய்-ன் வீழ்ச்சியை அரசு கண்டும் காணாமலும் இருப்பது இதனால்தான்' – நிபுணர் சொல்வதென்ன?

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்துகொண்டே வருகிறது....

‘இதுதான் உங்களது நாகரிக அரசியலா ஜோசப் விஜய்?’ – வானதி சீனிவாசன் சாடல்!

பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்களின்...

ஆந்திரா: `நீண்டகாலத் திட்டமிடல் இல்லாமல் வெறுமனே…' – விவாதத்துக்குள்ளாகும் அரசின் திட்டம்!

மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டபோது, தென்...