CNG விலையும் கிலோவிற்கு ரூ. 2 உயர்வு!
பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து CNG விலையும் கிலோவிற்கு ரூ. 2 உயர்த்தப்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் போர் பதற்றத்தால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் டெல்லியில் ஒரு கிலோ CNG ரூ. 79.09-ஆகவும், மும்பையில் ரூ. 84-ஆகவும் அதிகரித்துள்ளது. பொதுப் போக்குவரத்து வாகனங்கள் பெரும்பாலும் CNG-ல் இயங்குவதால், இந்த விலை உயர்வு சாமானிய மக்களின் பயணச் செலவை நேரடியாகப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!

மேற்கு ஆசியப் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இன்று லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டுள்ளன.
இதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்துள்ளது. அதாவது, ரூ.100.80-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் இப்போது ரூ.103.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.11 உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது டீசல் விலை ரூ.95.50 ஆக உள்ளது.




