20
June, 2026

A News 365Times Venture

20
Saturday
June, 2026

A News 365Times Venture

`சில நாய்கள் விசுவாசமாக இல்லை' – பிரிந்துசென்ற எம்.பி.க்கள் மீது எம்.பி. சஞ்சய் ராவத் சாடல்

Date:

மகாராஷ்டிராவில் சிவசேனா(உத்தவ்) கட்சியை சேர்ந்த 6 எம்.பி.க்கள் தங்களை தனி அணியாக அறிவிக்கவேண்டும் என்று கோரி மக்களவை சபாநாயகரிடம் மனு கொடுத்து இருக்கின்றனர். இதனிடையே அவர்கள் 6 பேரும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேர முடிவு செய்துள்ளனர். இதனால் உத்தவ் தாக்கரே கடும் அதிருப்தியில் இருக்கிறார்.

அவரது கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் இன்று காலை சமூக வலைத்தள பக்கத்தில் பிரிந்து சென்ற எம்.பி.க்களை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். அவர் தனது பதிவில், “சிலர் நாய்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் விசுவாசமாக இல்லை”என்று குறிப்பிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

முன்னதாக அவர் அளித்த பேட்டியில், கட்சி கொறடாவின் உத்தரவை 6 எம்.பி.க்களும் மீறி இருக்கின்றனர். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடங்கியுள்ளது.

கட்சி மாறிய எம்.பி.க்கள்

சிவசேனா தொண்டர்கள் என்று தங்களைக் கருதிக் கொண்டவர்கள் கோழைகள். சிவசேனா தொண்டர்கள் அவ்வளவு கோழைகள் அல்ல. இவர்கள் தங்களை சிவசேனா தொண்டர்களாக கருதுகிறார்கள். ஆனால் அவர்கள் ஜெய்ப்பூரில் மறைந்து கொண்டார்கள். அவர்களின் பதவியை பறிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது.

அவர்களை தகுதி நீக்கம் செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். மக்களவை சபாநாயகர் விதிகள், சட்டம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி செயல்பட்டால், இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். சிவசேனா 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

மேலும் பாலாசாகேப் தாக்கரேவின் பிறந்த நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. நாங்கள் எப்போதும் பாலாசாகேப் தாக்கரேயிடமிருந்து உத்வேகம் பெறுகிறோம். தீமை ஒழியும் வரை தொடர்ந்து போராடுவோம்” என்று அவர் கூறினார். சஞ்சய் ராவத் மீது ஏற்கனவே ஏக்நாத் ஷிண்டே கட்சியினர் கோபத்தில் இருக்கின்றனர். சஞ்சய் ராவத் தான் உத்தவ் தாக்கரேயின் கட்சியை நடத்துவதாக பரவலாக பேசப்படுகிறது.!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மாநிலங்களவை எண்ணிக்கை : `திட்டமிட்டு' முன்னேறும் பாஜக – கையறு நிலையில் காங்கிரஸ்! | முழு அலசல்

'தங்களிடம் பெரும்பான்மை பலம் உள்ளதால் எளிதாக வெற்றி பெறலாம்' என்ற நம்பிக்கையில்...

வேலுமணியிடன் உரசல்; எடப்பாடியின் கொங்கு கணக்கு… செந்தில் பாலாஜியின் மெளனம்! – பரபரக்கும் களம்!

செந்தில் பாலாஜி தி.மு.க-விலிருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க-வில் இணைவதாக கரூர் மாவட்டத்தில்...

விஜய் படங்களுக்கு பணியாயாற்றிய பிரபல ஒளிப்பதிவாளர்! – மனோஜ் பரமஹம்சாவுக்கு அரசுப் பொறுப்பு

பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவுக்கு தமிழ்நாடு அரசுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 'ஈரம்',...

NEET: 'மாபெரும் உயிர்கொல்லும் Scam'- தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் மாணவி தற்கொலை; உதயநிதி இரங்கல்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வெள்ளாளபுரத்தைச் சேர்ந்த 19 வயதுடைய...