21
June, 2026

A News 365Times Venture

21
Sunday
June, 2026

A News 365Times Venture

சர்வதேச யோக தினம்: '50 வயதில் இருந்ததை விட 70 வயதில்.!' – மோடி பேசிய 6 முக்கிய புள்ளிகள்!

Date:

இன்று 12-வது சர்வதேச யோக தினம்.

இந்த ஆண்டு இந்திய பிரதமர் மோடி கொல்கத்தாவில் நடந்த யோக நிகழ்வில் கலந்துகொண்டிருக்கிறார். அந்த நிகழ்வில் மோடி பேசிய முக்கிய விஷயங்கள்…

> ஒட்டுமொத்த நாடும் யோகாவின் ஆற்றலாலும் விழிப்புணர்வாலும் நிறைந்து காணப்படுகிறது. ஒட்டுமொத்த தேசமும், உலகமும் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டிருப்பது போலத் தோன்றுகிறது. இதுதான் யோகாவின் பலம்.

> யோகா தினத்தில் வங்காள மண்ணில் இருப்பது மிகவும் சிறப்பானது. பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற ஞானிகள் அவதரித்த புனித பூமி இது. இங்கிருந்துதான் சுவாமி விவேகானந்தர் யோகாவை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

மோடி

மேலும் மகரிஷி அரவிந்தர் போன்ற சிறந்த யோகிகள் பிறந்த இடமும் இதுவே. லஹிரி மகாசயர் போன்ற மாபெரும் யோகிகள் யோகா பாரம்பரியத்தை புதிய உயரத்திற்கு கொண்டு சென்ற மண் இது.

இன்று, இந்த மண்ணில் கூட்டு யோகா பயிற்சி செய்வது ஒரு தனித்துவமான ஆன்மீக உணர்வைத் தருகிறது.

> இந்த வங்காள மண்ணில் பிறந்த குருதேவ் ரவீந்திரநாத் தாகூர், ஒரு மனிதனின் அடையாளம் தனித்திருப்பதில் இல்லை… தன்னைச் சுற்றியுள்ள உலகத்துடன் இணைந்திருப்பதில் தான் உள்ளது என்று நம்பினார்; இந்த இணைப்பே யோகாவின் முக்கிய சாராம்சமாகும்.

> யோகா என்பது வெறும் உடற்பயிற்சிக்கான ஒரு வழிமுறை மட்டுமல்ல. அது ஒரு குறிப்பிட்ட வயதினருக்கு மட்டும் கட்டுப்பட்டதும் அல்ல. இந்தியாவில், யோகாவை மனித வாழ்க்கையின் ஒளியாக, அதாவது விழிப்புணர்வை ஆற்றலுடன் இணைக்கும் ஒன்றாகவே நாம் எப்போதும் பார்த்து வருகிறோம்.

> நண்பர்களே, ஆரோக்கியமான முதுமைக்கு யோகா என்று நாம் கூறும்போது, வயது என்பது மனிதனின் திறமையைக் குறைத்துவிடக் கூடாது என்பதாகும். மனித வாழ்க்கை தொடர்ந்து வளர யோகா உதவும். நம் இலக்கு என்னவென்றால்:

மோடி
மோடி

* 20 வயதில் இருந்ததை விட 40 வயதில் நாம் அதிக வளைந்து கொடுக்கும் தன்மையுடன் இருக்க வேண்டும்.

* 30 வயதில் இருந்ததை விட 50 வயதில் அதிக ஆற்றலுடன் இருக்க வேண்டும்.

* 50 வயதில் இருந்ததை விட 70 வயதில் வாழ்க்கை முறை நோய்களை எதிர்க்கும் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

இங்குதான் யோகா நமக்கு உதவுகிறது.

> கீதையில், யோகா குறித்து பகவான் கிருஷ்ணர் இவ்வாறு கூறியுள்ளார்:

“யுக்தாஹார-விஹாரஸ்ய, யுக்த-சேஷ்டஸ்ய கர்மஸு, யுக்த-ஸ்வப்னாவபோதஸ்ய, யோகோ பவதி துக்க-ஹா”.

இதன் பொருள், சமச்சீரான உணவு மற்றும் பொழுதுபோக்கு, சமநிலையான செயல்கள் மற்றும் முயற்சிகள், சீரான தூக்கம் மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றின் மூலம் யோகா என்பது துயரங்களை அழிப்பதாக மாறுகிறது என்பதாகும். இந்தச் சமநிலைதான் யோகாவின் அடித்தளம், இதுதான் நம் வாழ்க்கையின் அடித்தளமும் கூட.

இந்திய பிரதமர் மோடி கலந்துகொண்ட யோகா நிகழ்வு வீடியோ:

சென்னையில் நடந்த யோகா நிகழ்வு வீடியோ:

சென்னை யோகா நிகழ்வு போட்டோஸ்

சென்னை - யோகா தின நிகழ்வு
சென்னை – யோகா தின நிகழ்வு
சென்னை - யோகா தின நிகழ்வு
சென்னை – யோகா தின நிகழ்வு
சென்னை - யோகா தின நிகழ்வு
சென்னை – யோகா தின நிகழ்வு
சென்னை - யோகா தின நிகழ்வு
சென்னை – யோகா தின நிகழ்வு
சென்னை - யோகா தின நிகழ்வு
சென்னை – யோகா தின நிகழ்வு

தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகம் கலந்துகொண்ட யோகா நிகழ்வு வீடியோ:

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ட்ரம்ப் VS மெலோனி: மோதிக்கொள்ளும் தலைவர்கள்; சிக்கலில் மெலோனியின் சர்வதேச அதிகாரம்!

நெருங்கமான நட்பு!ஒரு காலத்தில் சர்வதேச அரங்கில் மிகவும் நெருங்கிய அரசியல் கூட்டாளிகளாகக்...

தள்ளி நிற்கும் ஸ்டாலின்… நெருக்கம் காட்டும் ராகுல் – காங்கிரஸ் போடும் கணக்கு என்ன?

"அன்புச் சகோதரர்" மிஸ்ஸிங்மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு...

மாதப்படி வழக்கு: `மீண்டும் ஆஜராகுங்கள்'-பினராயி விஜயன் மகளுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை!

கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்த சி.எம்.ஆர்.எல் தனியார் நிறுவனம் மற்றும் சி.பி.எம்...

'இனி இந்தியா உலக நாடுகளுக்கு சந்தை இல்லை' – மோடி | இந்திய கப்பற்படையில் 3 'Made in India' கப்பல்கள்

இந்திய கப்பற்படையில் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட மூன்று கப்பல்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இந்தக்...