21
April, 2026

A News 365Times Venture

21
Tuesday
April, 2026

A News 365Times Venture

`கோவை தெற்கு தொகுதி தேர்தல் ரத்தா?' – மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

Date:

கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க. சார்பில் செந்தில் பாலாஜியும், அ.தி.மு.க. சார்பில் அம்மன் அர்ச்சுணனும் போட்டியிடுகின்றனர். தி.மு.க-வினர் வாக்காளர்களுக்கு ரூ.5 ஆயிரமும், அ.தி.மு.க-வினர் ஆயிரம் ரூபாயும் பணப்பட்டுவாடா செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு இடங்களில் பணப்பட்டுவாடா செய்ததாக தி.மு.க-வினருக்கு எதிராக, அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சியினர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். குறிப்பாக ராமநாதபுரம் 80 அடி சாலையில் தி.மு.க, அ.தி.மு.க-வினர் இடையே அடிதடி நடந்த நிலையில், போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

இதனிடையே பணப்பட்டுவாடா புகார் காரணமாக கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் மற்றும் கோவை தெற்கு தொகுதி சுயேச்சை வேட்பாளர் வேல்முருகன் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதற்கு கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, “சட்டமன்ற பொது தேர்தல் தொடர்பாக அதிகாரப்பூர்வமில்லாத செய்திகளை வதந்திகளாக பரப்பி வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தமிழ்நாட்டில் தொடங்கியது `அமைதி நேரம்’ – ஓய்ந்தது 2026 சட்டமன்றத் தேர்தல் பிரசாரம்!

தமிழ்நாட்டின் சட்டப்பேரவைத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டின் தேர்தலில் இம்முறை...

அண்ணா நகர் 2026! – சிற்றரசின் ‘செக்-மேட்’ பாலிடிக்ஸ்!

சென்னை என்றாலே அது ‘திமுகவின் கோட்டை’ என்பது அரசியல் பாலபாடம். அதிலும்...

“கடைசி நேர ரிப்போர்ட்… கடுப்பான ஸ்டாலின்” – வேகம் எடுத்த உடன்பிறப்புகள்!

உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டும், சில தொகுதிகளில் கட்சியினர் காட்டும் சுணக்கமும் தி.மு.க...