2
May, 2026

A News 365Times Venture

2
Saturday
May, 2026

A News 365Times Venture

“ஐந்தே மாதத்தில்… எதிர்க்கட்சியினரின் எண்ணத்தை தவிடுபொடியாக்கி உள்ளோம்" – முதல்வர் ஸ்டாலின்

Date:

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது தமிழ்நாட்டையே அதிரவைத்தது. பல அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து ஞானசேகரன் என்பவரை காவல்துறை கைது செய்து விசாரித்துவந்தது. இது தொடர்பான வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு இன்று காலை தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில் ஞானசேகரன் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது.

ஸ்டாலின்

இந்த தீர்ப்பை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்றனர். அதே நேரம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “இந்த தீர்ப்பு வரவேற்கத் தக்கதுதான். ஆனால், இந்த வழக்கின் மிக முக்கியமான கேள்வியான யார் அந்த சார் என்பதற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஐந்தே மாதத்தில்…

அதைத் தொடர்ந்து இந்த தீர்ப்பு குறித்து தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின், “சென்னை மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கைத் துரிதமாக நடத்தி, ஐந்தே மாதத்தில் நீதியைப் பெற்றுத் தந்துள்ளது நமது காவல்துறை. விசாரணை அதிகாரிகளுக்கும் அரசு வழக்கறிஞர்களுக்கும் மாண்பமை நீதிமன்றத்துக்கும் நன்றி! காவல்துறையினரிடம் நான் தொடர்ந்து கூறுவது: “குற்றம் நடக்கக் கூடாது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

நடந்தால் எந்தக் குற்றவாளியும் தப்பக் கூடாது; விசாரணையைத் துரிதமாக நடத்தி, தண்டனை பெற்றுத் தர வேண்டும்!”.

குற்றங்களின் கூடாரமாக அன்று அரசை நடத்தி, இன்று அவதூறுகளை அள்ளித் தெளித்து, மலிவான அரசியல் செய்யத் துடித்த எதிர்க்கட்சியினரின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி உள்ளோம். சட்டநீதியையும் – பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதிசெய்வோம்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகளில் மீண்டும் இன்று தேர்தல்: 'எங்களுக்கு தான் பெரும்பான்மை' – திரிணாமுல்

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகியவை சட்டமன்ற தேர்தல்...

"இதுதான் நீங்கள் செலுத்தும் தேர்தல் பில்; அடுத்து பெட்ரோல், டீசல்" – கேஸ் விலை உயர்வு பற்றி ராகுல்

இந்தியாவில் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை ஒரே நாளில் 993...

`ஒரே அடியாக…' – ரூ.993 உயர்ந்த வணிக சிலிண்டரின் விலை!

அமெரிக்கா, ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே தொடர்ந்து வரும்...

'மோடியின் வசூல் வேட்டை தொடர்கிறது' – வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம்

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள்...