23
August, 2026

A News 365Times Venture

23
Sunday
August, 2026

A News 365Times Venture

"எம்பி-க்களே இல்லாத தவெக-வை எப்படி இந்தியாக் கூட்டணில் சேர்ப்பது?" – மாணிக்கம் தாகூர் கேள்வி

Date:

கோவை விமானநிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

அப்போது, “தற்போது 23 கட்சிகள் இந்தியாக் கூட்டணியில் தொடர்கின்றன.

தவெகவுக்கு எப்போது எம்.பிக்கள் வருகிறார்களோ, அப்போது நாங்கள் அவர்களை இந்தியாக் கூட்டணியில் இணைந்து கொள்ளச் சொல்லுவோம். எம்.பி.க்களே இல்லாத தவெகவை எப்படி இந்தியாக் கூட்டணில் தற்போது சேர்க்க முடியும்?

முதல்வர் விஜய்

விஜய்யைப் பொறுத்தவரை 106 இடங்கள் கிடைத்ததும், அவரை முதலில் தொடர்புகொண்டு பேசியது ராகுல் காந்தி. தான் முதல்வராக வேண்டும் என்பதற்காக ராகுல்காந்தியிடம் ஆதரவு கேட்டார் விஜய்.

தவெகவின் இன்றைய அமைச்சர்களுக்கு அது நன்றாகத் தெரியும். அவர்கள் அமைச்சர் ஆவதற்கும், ஆட்சி அமைப்பதற்கும் முதலில் ஆதரவு தெரிவித்தது காங்கிரஸ் கட்சி. இல்லாவிட்டால், அமித்ஷா தவெக ஆட்சியை வர விடாமல் செய்திருப்பார்.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

கட்சியை உடைத்து, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியிருப்பார்கள். இந்த நிலை அனைவருக்கும் தெரியும். நாடாளுமன்றத் தேர்தல் வரட்டும், விஜய் சரியான முடிவை எடுப்பார்” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?" – திமுக ஊழல் ஆதாரம் குறித்த கேள்விக்கு அருண்ராஜ் கிண்டல் பதில்

முழுமையாக 100 நாட்களைக் கடந்துவிட்ட த.வெ.க ஆட்சியில், தமிழக சட்டசபையில், ஆளுங்கட்சிக்கும்...

புதுக்கோட்டை: 'பேய் விரட்டும்' போராட்டம்; எலுமிச்சம்பழம், தாயத்து, சிலுவை கட்டிய த.வா.க-வினர்!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அன்னவாசல் ஒன்றியம் மாங்குடி கிராமத்தில்...

Vijay: "இன்றைய CM… வருங்கால PM… முதல்வர் விஜய்தான் வருங்கால பிரதமர்" – அமைச்சர் ஜெகதீஸ்வரி

தவெக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் நிலையில், முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர்...

’திமுக எம்.எல்.ஏ-க்கள் கார் வாங்க மறுத்ததற்கு இதுதான் காரணம்.!’ – செங்கோட்டையன் சொன்ன விளக்கம்

கோவை விமான நிலையத்தில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்....