29
July, 2026

A News 365Times Venture

29
Wednesday
July, 2026

A News 365Times Venture

`இளைஞர்களின் கருத்தை முட்டாள்கள் கேட்பதில்லை; அமித் ஷா அவைக்கு வராதது ஏன்?'- நாடாளுமன்றத்தில் ராகுல்

Date:

நாடாளுமன்றத்தில் பொதுத்தேர்வு திருத்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “அமித் ஷா அவைக்கு வராதது ஏன்? அவருக்கு துணிச்சல் இல்லையா?

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறை அல்லது வெறுப்பின் வெளிப்பாடு அல்ல. அது நாட்டின் இளைஞர்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கும் ஆழமான வெளிப்பாடு.

நாடாளுமன்றம்

மாணவர்கள் நடத்திய போராட்டம் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்திருக்கிறது. இளைஞர்கள் தங்களது எதிர்காலம் குறித்து கொண்டுள்ள கவலை மற்றும் எதிர்பார்ப்புகளையே அந்த போராட்டம் வெளிப்படுத்தியது.

இந்த மாணவர் போராட்டத்தை எந்த அரசியல் கட்சியும் தவறாக புரிந்துகொள்ளக் கூடாது. ஆளும் பாஜக உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் மாணவர்களின் ஜனநாயகப்பூர்வமான கருத்து வெளிப்பாட்டை மதிக்க வேண்டும். இந்த போராட்டத்தில் தவறு எதுவும் இல்லை.

இளைஞர்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தை கொச்சைப்படுத்தக் கூடாது. எதிர்காலத்தை சிந்தித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களை அரசு முட்டாள்கள் என சித்திரிக்கிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மாணவர்கள் போராட்டம் குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும். இளைஞர்களின் கருத்தை முட்டாள்கள் கேட்பதில்லை” என்று ராகுல் காந்தி அவையில் பேசியிருக்கிறார். ராகுலின் இந்தக் கருத்துக்கு பாஜக எம்.பி-க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அமளியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'கொசுவை திமுகக்காரனா லாரியில கடத்திட்டு வரான்?' – திமுக கவுன்சிலர் கலகல

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று ரிப்பன் மாளிகையில் நடந்திருந்தது. இதில்...

மக்களவையில் நிறைவேறிய தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா 2026 – விவரம் என்ன?

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த 'பொதுத் தேர்வுகள் (முறைகேடு...

NEET 2026 முறைகேடு: 13 கைது, 360 சாட்சிகளுடன் குற்றப்பத்திரிகை – CBI சொல்வது என்ன?

டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கி கடந்த ஒரு மாதமாக இந்தியாவையே உலுக்கி...

'ஆர்த்தோ டாக்டர்களுடன் சட்டமன்றத்தை நடத்த வேண்டியிருக்கும்!' – முதல்வரை எச்சரித்த திமுக கவுன்சுலர்!

சென்னை ரிப்பன் பில்டிங்கில் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடந்து வருகிறது. இந்தக்...