17
April, 2026

A News 365Times Venture

17
Friday
April, 2026

A News 365Times Venture

“அனைத்துப் பள்ளிகளிலும் பாலியல் புகார்களுக்கு புகார் பெட்டிகள்!'' -புதுச்சேரி அரசு அறிவிப்பு

Date:

புதுச்சேரி தவளக்குப்பம் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி, அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்படடதாக எழுந்த புகார் மாநிலத்தில் அசாதாரண சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில், காவல்துறை உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் காவல்துறை தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், “தனியார் பள்ளியில் மாணவி பாலியல் சீண்டலுக்கு உள்ளான விவகாரத்தில், யாருடைய தலையீடும் இன்றி செயல்படும் காவல்துறை, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

அதேபோல புதுச்சேரியில் குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவின் செயல்பாடுகளை துரிதப்படுத்துவது குறித்து, முதலமைச்சர் ரங்கசாமியுடன் ஆலோசனை செய்யப்படும். மேலும் புதுச்சேரியிலுள்ள அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளிலும் குழந்தைகளுக்கான பாலியல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்துப் பள்ளிகளிலும் பாலியல் சீண்டல்கள் குறித்துப் புகார் தெரிவிக்க, காவல்துறை சார்பில் விரைவில் புகார் பெட்டிகள் வைக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"பெண் தெய்வமான காளியும் கருப்பு உடைதான் அணிந்துள்ளார்.!"- மோடியின் விமர்சனத்திற்கு கனிமொழி பதிலடி

மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதம்...

தொகுதி மறுவரையறை: “இறுதியில் ஓர் அரசியல் மதிப்பிழப்பு நடவடிக்கையாகவே முடியும்" – எம்.பி சசி தரூர்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் இரண்டாம் நாளான இன்று மகளிர் இட ஒதுக்கீடு...

“நடிகர் மீது மக்களுக்கு இருக்கும் அன்பு அரசியலுக்கானது அல்ல" – விஜய் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ்!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தற்போதைய அரசியல் சூழல் என்பது...