7
July, 2026

A News 365Times Venture

7
Tuesday
July, 2026

A News 365Times Venture

`அதிமுக-வில் டிடிவி தினகரன் ரீ-என்ட்ரி?' – எடப்பாடியிடமே வைக்கப்பட்ட கோரிக்கை! – நடந்தது என்ன?

Date:

அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் தமிழக வெற்றிக்கழகத்தை நோக்கி நகர்ந்து வரும் அரசியல் சூழலில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தஞ்சாவூர் கிழக்கு மாவட்டம் மற்றும் கும்பகோணம் பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி அமைப்பை வலுப்படுத்தல் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிமுகவின் அரசியல் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி

அப்போது சில மாவட்ட நிர்வாகிகள், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைக்கும் முயற்சியை கட்சி தலைமையகம் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “டிடிவி தினகரன் தற்போது தனியாக ஒரு அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். அப்படியிருக்கும்போது அவரை எப்படி அழைத்து வந்து கட்சியில் சேர்க்க முடியும்?” என்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுகவை மேலும் வலுப்படுத்த வேண்டுமெனில் டிடிவி தினகரனை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கலாம் என்று சில நிர்வாகிகள் கருத்து தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில மாதங்களாக அதிமுகவின் சில நிர்வாகிகள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் மாற்றுக் கட்சிகளை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், எதிர்க்கட்சித் தரப்பில் வாக்கு சிதறலைத் தடுக்கவும், அதிமுக ஆதரவு வாக்குகளை ஒருங்கிணைக்கவும் டிடிவி தினகரனுடன் மீண்டும் இணக்கமான உறவை உருவாக்க வேண்டும் என்ற கருத்து கட்சியின் ஒரு பகுதியினரிடம் உருவாகி வருகிறது.

இதனால், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் முன்வைத்துள்ள இந்தக் கோரிக்கை அதிமுகவின் எதிர்காலம் தொடர்பான விவாதங்களுக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளதாக பேசப்படுகிறது.

என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Vijay: உயர் நீதிமன்றத்தில் முதல்வர் விஜய்க்கு எதிரான 4 தேர்தல் வழக்குகள் விசாரணை – என்னென்ன? | Live updates

ஆதிதிராவிடர் நலத்துறையில் இருந்து 'சமூகநீதித்துறை'தமிழ்நாடு அரசாங்கத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை 'சமூகநீதித்துறை' என்று அதிகாரப்பூர்வமாக...

"9.1 கோடி ஈரான் மக்கள் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை; ஆனால், போருக்குக் காரணம்…" – ட்ரம்ப்

ஈரானில் வருகிற ஜூலை 9-ம் தேதி வரை உச்சத் தலைவர் அயோதுல்லா...

மதுரை: ரூ. 13,132 கோடி மதிப்புள்ள கிரானைட் வழக்கு; 13 ஆண்டுகளாக இழுபறி; குவிந்துள்ள கற்கள் | Photos

மதுரை: காதல் கோட்டை க்ளைமேக்ஸ் ரீ-கிரியேஷன்; ரீல்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டான ரயில்...