25
April, 2025

A News 365Times Venture

25
Friday
April, 2025

A News 365Times Venture

விருதுநகர்: ஆணையர் திட்டியதால் ஆய்வாளர் மயங்கி விழுந்தாரா? தீயாகப் பரவிய செய்தி; நடந்தது என்ன?

Date:

விருதுநகர் நகராட்சி ஆணையர் சுகந்தி. இவர், வருவாய் ஆய்வாளரைத் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதால் மனவேதனை அடைந்த அந்த ஊழியர் பதற்றத்தில் மயக்கமடைந்து கீழே விழுந்ததாகப் பரபரப்பு செய்தி பரவியது. எனவே நடந்தது என்ன என அறிய நகராட்சி அலுவலர்களிடம் விசாரித்தோம்.

அப்போது நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் நகராட்சியில் பணிபுரியும் நகராட்சி ஊழியர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் அனைவரும் அலுவலக நேரத்திற்கு முன்பாக வரவேண்டும், நகராட்சிக்கு வரவேண்டிய வரி பாக்கிகளை விடுபடுதல் இல்லாமல் வசூலித்து நகராட்சி நிதிநிலையை உயர்த்தவேண்டும் எனக் கூறியிருந்தார்.

விருதுநகர் சந்திப்பு

அதன்படி, இன்று காலை வெகு சீக்கிரமே நகராட்சி அலுவலகப் பணியாளர்கள் வந்திருந்தனர். அப்போது வரி வசூல் குறித்து வருவாய் ஆய்வாளர்களுக்கு ஆணையாளர் அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தபோது, வருவாய் ஆய்வாளர் சரவணன் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதைத் தொடர்ந்து ஆய்வாளர் சரவணன் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். ஆனால் அதற்குள் இந்த சம்பவம், வருவாய் ஆய்வாளர் சரவணனை, ஆணையாளர் சுகந்தி தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதால்தான் பதற்றத்தில் அவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்ததாகப் பரவியது” என்றனர்.

சம்பவம் தொடர்பாக ஆணையாளர் சுகந்தியிடம் கேட்டதற்கு, “வருவாய் ஆய்வாளர் சரவணன் சிவகாசியைச் சேர்ந்தவர். அவர் சிவகாசி மாநகராட்சியில் வருவாய் ஆய்வாளராக இதற்கு முன்பு பணியிலிருந்தபோது இதேபோல, இரண்டு முறை மயக்கம் அடைந்து கீழே விழுந்திருக்கிறார். தொடர்ந்து அங்கு ஏற்பட்ட பிரச்னையின் காரணமாகச் சரவணன் விருதுநகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சரவணனுக்குச் சர்க்கரை நோய் போன்ற உடல்நல பாதிப்புகள் உள்ளன. அதற்காக அவர் மருந்து மாத்திரைகளும் சாப்பிட்டு வருகிறார். இந்த நிலையில் உடல் நலனில் அவர் அஜாக்கிரதையாகச் செயல்பட்டதால் காலை மயக்கம் அடைந்துள்ளார். இதுதான் நடந்தது” என்றார்.

ஆய்வாளர் சரவணன்
ஆய்வாளர் சரவணன்

இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த சரவணனிடம் போலீஸார் விசாரிக்கையில், காலையில் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்து மாத்திரைகளை உட்கொள்ளாததாலும், உணவு சாப்பிடாததாலும் தலைச் சுற்றல் ஏற்பட்டு மயக்கம் அடைந்து கீழே விழுந்ததாகத் தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Indus River: “சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது ஓகே; நீரை எங்கு தேக்குவீர்கள்?'' -ஒவைசி கேள்வி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது...

Pahalgam: சோதனையின் போது வெடித்த தீவிரவாதிகளின் வீடுகள்; `நாங்கள் காரணம் இல்லை' கூறும் அதிகாரிகள்!

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் சம்பவத்தில் தொடர்புள்ள இரண்டு தீவிரவாதிகளின் வீடு இடிந்து...

`சொத்து குவிப்பு வழக்கில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் விடுவிப்பும் ரத்து' – உயர் நீதிமன்றம் அதிரடி

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை...

`துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசும் காவல்துறையும் மிரட்டியுள்ளது’ – குற்றச்சாட்டும் ஆளுநர் ரவி

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஊட்டி ராஜ்பவனில் துணை வேந்தர்களுக்கான மாநாடு நடைபெற்றது....