25
April, 2025

A News 365Times Venture

25
Friday
April, 2025

A News 365Times Venture

“விஜய் ஒரு நாளும் எம்ஜிஆர் ஆக முடியாது…" – ஜெயக்குமார் விமர்சனம்

Date:

2026 ஆம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்பது விஜய்யின் பகல் கனவு என்றும் அது ஒரு நாளும் நிறைவேறாது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருக்கிறார்.

செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “தமிநாட்டு மக்கள்தான் எஜமானர்கள். அவர்கள்தான் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள். திமுகவிற்கு மாற்று அதிமுக-தான். இன்று எதிர்கட்சிகள் இருக்கலாம். ஆனால் பிரதான எதிர்கட்சி அதிமுகதான். அந்த ஒரு அடிப்படையில் மக்கள் எங்களுக்கு ஆதரவை அளிப்பார்கள். அதனால் மீண்டும் அம்மாவின் அரசு பொதுச்செயலாளர் தலைமையில் மலரும். இது 2026-ல் நடக்கும்.

ஜெயக்குமார் முன்னாள் அமைச்சர்

புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் அவர்களது கட்சிக்காரர்களை திருப்திப்படுத்துவதற்காக 2026-ல் ஆட்சி அமைப்போம் என்று சொல்லலாம். அது அவர்களது உரிமை. அதை நாம் ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டு வாயை மூடி விடமுடியுமா? 2026 ஆம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்கும் என விஜய் பகல் கனவு காண்கிறார். கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த எம்ஜிஆர் உடன் தன்னை ஒப்பிடுகிறார். ஆனால், விஜய் ஒரு நாளும் எம்ஜிஆர் ஆக முடியாது” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Indus River: “சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது ஓகே; நீரை எங்கு தேக்குவீர்கள்?'' -ஒவைசி கேள்வி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது...

Pahalgam: சோதனையின் போது வெடித்த தீவிரவாதிகளின் வீடுகள்; `நாங்கள் காரணம் இல்லை' கூறும் அதிகாரிகள்!

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் சம்பவத்தில் தொடர்புள்ள இரண்டு தீவிரவாதிகளின் வீடு இடிந்து...

`சொத்து குவிப்பு வழக்கில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் விடுவிப்பும் ரத்து' – உயர் நீதிமன்றம் அதிரடி

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை...

`துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசும் காவல்துறையும் மிரட்டியுள்ளது’ – குற்றச்சாட்டும் ஆளுநர் ரவி

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஊட்டி ராஜ்பவனில் துணை வேந்தர்களுக்கான மாநாடு நடைபெற்றது....