25
April, 2025

A News 365Times Venture

25
Friday
April, 2025

A News 365Times Venture

“லோகோ பைலட் இளநீர், ஹோமியோபதி மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்" – அதிகாரி அறிவிப்பால் சர்ச்சை!

Date:

இந்திய ரயில்வேயின் லோகோ பைலட்டுகள் பணிக்கு வரும்போது ப்ரீதலைசர்கள் மிஷின் மூலம் சோதிக்கப்படுவார்கள். அதனடிப்படையில், கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் பிரிவின் லோகோ பைலட்டுகள் சோதிக்கப்பட்டனர். அப்போது, அவர்கள் மது அருந்தியிருந்ததாக அந்த மிஷின் சுட்டிக்காட்டியது. அதைத் தொடர்ந்து, குற்றச்சாட்டை சந்தித்த ஊழியர்களின் இரத்த மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவில் ‘அவர்களின் ரத்தத்தில் ஆல்கஹால் இல்லை’ என்பது தெளிவாகி முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

ரயில்வே

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், திருவனந்தபுரம் பிரிவின் மூத்த பொறியியலாளர் ஒரு சுற்றறிக்கையை பணியாளர்களுக்கு அனுப்பியிருக்கிறார். அதில், பணியில் இருக்கும்போது, இளநீர், ஹோமியோபதி மருந்துகள், வாழைப்பழம், இருமல் சிரப்கள், குளிர்பானங்கள் போன்றவைகளை உட்கொள்ளக்கூடாது. ஒரு லோகோ பைலட் தடைசெய்யப்பட்ட பொருள்களில் ஏதேனும் ஒன்றை உட்கொள்ள விரும்பினால், அவர்கள் டிப்போவில் உள்ள க்ரூ கன்ட்ரோலருக்கு (CRC) எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும்.

ஆல்கஹால் கொண்ட மருந்தையும் ரயில்வே மருத்துவ அதிகாரியின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெற்ற பின்னரே பயன்படுத்த முடியும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு ரயில்வே ஊழியர்களும், லோகோ பைலட்டுகளின் சங்கங்களும் கடும் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். இது தொடர்பாக ரயில்வே ஊழியர்கள் சங்கம், “எங்களை சோதிக்கும் ப்ரீத்லைசர் மிஷின் ரிப்பேராக இருப்பது, ஆல்கஹால் சோதனை முடிவுகளில் தெரியவந்திருக்கிறது. அப்படியானால் அந்த மிஷினை மாற்றும் முடிவைதான் ரயில்வே அதிகாரி எடுத்திருக்க வேண்டும். ஆனால், எங்களில் உணவு, மருந்து விஷங்களில் கடுமை காண்பிப்பது முறையல்ல” எனக் குறிப்பிடுகின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Pahalgam: சோதனையின் போது வெடித்த தீவிரவாதிகளின் வீடுகள்; `நாங்கள் காரணம் இல்லை' கூறும் அதிகாரிகள்!

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் சம்பவத்தில் தொடர்புள்ள இரண்டு தீவிரவாதிகளின் வீடு இடிந்து...

`சொத்து குவிப்பு வழக்கில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் விடுவிப்பும் ரத்து' – உயர் நீதிமன்றம் அதிரடி

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை...

`துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசும் காவல்துறையும் மிரட்டியுள்ளது’ – குற்றச்சாட்டும் ஆளுநர் ரவி

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஊட்டி ராஜ்பவனில் துணை வேந்தர்களுக்கான மாநாடு நடைபெற்றது....