25
April, 2025

A News 365Times Venture

25
Friday
April, 2025

A News 365Times Venture

மக்களின் கோரிக்கை மனுக்கள் குப்பையில்… செந்தில் பாலாஜியைக் குற்றம்சாட்டும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Date:

கரூர் அருகே வேலுச்சாமிபுரம் பகுதியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 108வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சின்னசாமி உள்ளிட்ட அ.தி.மு.க கட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். அப்போது, அந்தக் கூட்டத்தில், பேசிய முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க கரூர் மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர்,

“கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர், ‘மக்களுடன் முதல்வர்’ என மக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்று வருகின்றனர். அந்த மனுக்கள் எல்லாம் கோதூர் பகுதியில் உள்ள குப்பைக் காட்டில் வீசப்பட்டுள்ளன. பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் பண்டல்களாகச் சேகரித்து அந்த துறை ரீதியான அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டிய நிலையில், குப்பைக் காட்டில் வீசப்பட்டுள்ளன. ஏழை மக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களில், தையல் இயந்திரம் மற்றும் முதியோர் உதவித்தொகை வேண்டி பொதுமக்கள் சார்பில் வழங்கப்பட்ட மனுக்கள் அவை” என்பதை அவர் குறிப்பிட்டதோடு, அவற்றை வாசித்தும் காண்பித்தார்.

அ.தி.மு.க பொதுக்கூட்டம்

மேலும், தொண்டர்கள் மத்தியில், அந்த கோரிக்கை மனுக்கள் அடங்கிய பண்டலைப் பொதுக்கூட்ட மேடையில் தூக்கிப்பிடித்து, “தி.மு.க ஆட்சியில் மக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்கள் குப்பையில் வீசப்படும் நிலை தான் உள்ளது” என்று குற்றம்சாட்டி பேசி முடித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Pahalgam: சோதனையின் போது வெடித்த தீவிரவாதிகளின் வீடுகள்; `நாங்கள் காரணம் இல்லை' கூறும் அதிகாரிகள்!

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் சம்பவத்தில் தொடர்புள்ள இரண்டு தீவிரவாதிகளின் வீடு இடிந்து...

`சொத்து குவிப்பு வழக்கில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் விடுவிப்பும் ரத்து' – உயர் நீதிமன்றம் அதிரடி

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை...

`துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசும் காவல்துறையும் மிரட்டியுள்ளது’ – குற்றச்சாட்டும் ஆளுநர் ரவி

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஊட்டி ராஜ்பவனில் துணை வேந்தர்களுக்கான மாநாடு நடைபெற்றது....