1
May, 2026

A News 365Times Venture

1
Friday
May, 2026

A News 365Times Venture

'பொருளாதார அழுத்தத்தில் பாக்.?' ஈரான் போரால் பாகிஸ்தானிற்கு என்னென்ன பாதிப்பு? – ஷெபாஸே சொல்கிறார்!

Date:

ஈரான் போரில் அமெரிக்கா, ஈரானுக்கு இடையே பாகிஸ்தான் தான் மத்தியஸ்தம் செய்து வருகிறது.

ஈரான் போர் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் நேற்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியிருக்கிறார்.

என்ன பேச்சு?

“ஈரான் போர் பாகிஸ்தான் பொருளாதாரத்தில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, பாகிஸ்தான் அடைந்த பொருளாதார வளர்ச்சியிலும் இந்தப் போர் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜே.டி.வான்ஸ் – ஷெபாஸ் ஷெரீப்

800 மில்லியன் டாலர்கள்

ஈரான் போருக்கு முன்பு, பாகிஸ்தான் 300 மில்லியன் டாலர்களுக்கு எண்ணெய் இறக்குமதி செய்து வந்தது. இந்தப் போரினால் எண்ணெய் இறக்குமதியின் விலை இப்போது 800 மில்லியன் டாலராக மாறிவிட்டது.

இது பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு கூடுதல் அழுத்தத்தைத் தருகிறது.

இந்த விலை அதிகரிப்பால் பாகிஸ்தான் பெட்ரோல் நுகர்வைக் கடந்த வாரத்தை விட, இந்த வாரம் குறைத்துவிட்டது.

இதனால், இந்தப் போரை முடிப்பதற்கான செயல்களிலும், பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும் பாகிஸ்தான் தொடர்ந்து செயல்படும்.

மிகப்பெரிய முன்னேற்றம்

கடந்த ஏப்ரல் 11-ம் தேதி, இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா, ஈரானுக்கு இடையே 21 மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தை மிகப்பெரிய முன்னேற்றம்.

கடந்த வாரம் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் நடந்த சந்திப்பில், அவர் தலைமையிடம் பேசிவிட்டு பாசிட்டிவான பதிலை சொல்வதாக தெரிவித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்…

மக்களாட்சி நடக்கும் ஜனநாயக நாடுகளில் அரசுகளுக்கு ஊடகங்களே முகம் பார்க்கும் கண்ணாடிகளாக...

`கருத்துக் கணிப்புகளுக்கும் முடிவுகளுக்கும் சம்பந்தம் இல்லை!' – செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் த.வெ.க. உயர்மட்ட நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர்...