3
May, 2026

A News 365Times Venture

3
Sunday
May, 2026

A News 365Times Venture

'புதின் பைத்தியம்; ஜெலன்ஸ்கி பேசுவது எனக்கு பிடிக்கவில்லை' – இரு நாட்டு தலைவர்களிடமும் ட்ரம்ப் கடுமை

Date:

ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கான மத்தியஸ்த்தை அமெரிக்காவும், பற ஐரோப்பிய நாடுகளும் செய்துகொண்டு தான் வருகின்றன. பேச்சுவார்த்தையின் போதெல்லாம் ‘ஓகே’ சொல்லிவிட்டு, தங்களது நாட்டிற்கு சென்ற உடன் தாக்குதல், பதில் தாக்குதலை நடக்க தொடங்கிவிடுகின்றன இரு நாடுகளும்.

இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது…

“எனக்கும், ரஷ்ய அதிபர் புதினுக்கும் எப்போதும் நல்ல உறவு இருந்துள்ளது. ஆனால், இப்போது அவருக்கு என்னவோ ஆகிவிட்டது. அவர் பைத்தியமாகிவிட்டார். அவர் தேவையில்லாமல் பல மக்களின் உயிர்களை எடுத்துக்கொண்டிருக்கிறார்… நான் ராணுவ வீரர்களை மட்டும் சொல்லவில்லை.

ட்ரம்ப்

ஏவுகணைகளும், ட்ரோன்களும் எந்தக் காரணமும் இல்லாமல் உக்ரைன் நகரங்களின்மீது ஏவப்படுகின்றன.

அவருக்கு உக்ரைனின் ஒரு பகுதி மட்டுமே வேண்டாம்… உக்ரைனே வேண்டும் – இதை நான் முன்பிருந்தே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

ஆனால், இதை மெய்ப்பிப்பது போல அவர் எதாவது செய்தால், அது ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.

அதே மாதிரி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அவர் பேசுவதுபோல, அவர் நாட்டிற்கு எதுவும் செய்வதில்லை. அவர் வாயில் வந்து விழும் அனைத்துமே பிரச்னையைத் தான் உருவாக்குகிறது. அது எனக்கு பிடிக்கவில்லை. இதை நிறுத்திவிடுவது நல்லது.

அப்போது நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால், இந்தப் போரே தொடங்கி இருக்காது. இது ஜெலன்ஸ்கி, புதின், பைடனின் போர். ட்ரம்ப் உடையது அல்ல.

திறமையின்மை, வெறுப்பால் தொடங்கப்பட்ட பெரிய மற்றும் அழகற்ற தீயரி அணைக்க மட்டுமே நான் உதவுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"நாங்கள் இந்தியாவைப் போல் இல்லை; எரிபொருள் வளத்தில் எங்களின் நிலைமை மோசம்" – பாக். அமைச்சர் ஆதங்கம்

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழலால் பாகிஸ்தான் கடும் எரிபொருள் நெருக்கடியைச்...

"சேவை செய்யவே சீருடை" – நடுரோட்டில் பாஜக அமைச்சருடன் வாக்குவாதம் செய்த பெண்ணின் புது வீடியோ வைரல்

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வி அடைந்ததற்கு...

தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு; தயார் நிலையில் வாக்கு எண்ணும் மையங்கள்

தமிழக புதுச்சேரி, கேரளா, மற்றும் அஸ்ஸாம் ஆகிய மூன்று மாநில சட்டமன்றத்...

`மனக்குமுறல்கள் போராட்டமாக வெடிப்பது இயல்புதான்' – கோவையில் செல்வப்பெருந்தகை பேட்டி

தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பாக 2026 சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது....