25
April, 2025

A News 365Times Venture

25
Friday
April, 2025

A News 365Times Venture

பஞ்சமி நிலம்: ஓபிஎஸ் நிலப்பட்டா ரத்து… எஸ்சி, எஸ்டி ஆணையம் வழங்கிய அதிரடி உத்தரவு என்ன?

Date:

தேனியில் பஞ்சமி நிலத்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வாங்கியதாக கூறி, அந்நிலத்திற்கான பட்டாவை ரத்து செய்யுமாறு சென்னை  எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1991ம் ஆண்டு  தேனி, ராஜா களம் பகுதியில் உள்ள 40 சென்ட் பஞ்சமி நிலத்தை, மூக்கன் என்பவருக்கு ஆதிதிராவிட நலத்துறை வழங்கி இருக்கிறது.  இந்த நிலத்தை 15 ஆண்டுகளுக்கு வேறு யாருக்கும் உரிமை மாற்றம் செய்யக் கூடாது என்றும், அதன் பிறகும் அந்த நிலத்தை பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்க முடியும் என்றும் நிபந்தனை உள்ளது.

ஓ. பன்னீர்செல்வம்

இதனை மீறி, கடந்த 2008-ம் ஆண்டு இந்த நிலத்தை பட்டியலினத்தைச் சாராத ஹரி சங்கர் என்பவருக்கு மூக்கன் எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரிடமிருந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்நிலத்தை வாங்கி, தனது பெயரில் பட்டா வாங்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மூக்கனின் மகன் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மாநில பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

இப்புகாரை விசாரித்த சென்னையில் உள்ள மாநில எஸ்சி, எஸ்டி ஆணையம், பஞ்சமி நிலத்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வாங்கியதற்கு ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி, அந்த நிலத்துக்கு அவர் பெயரில் வழங்கப்பட்ட பட்டாவை அரசு ரத்து செய்ய உத்தரவிட்டது.

ஓ. பன்னீர்செல்வம்
ஓ. பன்னீர்செல்வம்

முறையற்ற வகையில், நிலத்தை மாற்றிக் கொடுத்த தாசில்தார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அதிகாரி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆணையம், அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பஞ்சமி நிலங்கள் எஸ்சி, எஸ்டி அல்லாத சிலருக்கு விற்கப்பட்டது சம்பந்தமாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ள நிலையில் ஓபிஎஸ் பெயரில் பெறப்பட்ட பட்டாவை ரத்து செய்ய எஸ்சி – எஸ்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது தேனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Indus River: “சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது ஓகே; நீரை எங்கு தேக்குவீர்கள்?'' -ஒவைசி கேள்வி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது...

Pahalgam: சோதனையின் போது வெடித்த தீவிரவாதிகளின் வீடுகள்; `நாங்கள் காரணம் இல்லை' கூறும் அதிகாரிகள்!

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் சம்பவத்தில் தொடர்புள்ள இரண்டு தீவிரவாதிகளின் வீடு இடிந்து...

`சொத்து குவிப்பு வழக்கில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் விடுவிப்பும் ரத்து' – உயர் நீதிமன்றம் அதிரடி

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை...

`துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசும் காவல்துறையும் மிரட்டியுள்ளது’ – குற்றச்சாட்டும் ஆளுநர் ரவி

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஊட்டி ராஜ்பவனில் துணை வேந்தர்களுக்கான மாநாடு நடைபெற்றது....