21
June, 2026

A News 365Times Venture

21
Sunday
June, 2026

A News 365Times Venture

’நான் தன்னந்தனி ஆளு’ – மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஒலித்த தவெக கட்சி பாடலால் சர்ச்சை!

Date:

கோவை சிங்கநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ அரசு மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் பவன குமார், இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி முதல்வர் வீரமணி மற்றும் மருத்துவ பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் நிகழ்வில் பேசிவிட்டு வரும்போது, த.வெ.க-வின் கட்சி பாடல் ஒளிபரப்பப்பட்டது.

இதேபோல இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து  கோவை பீளமேடு பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், மருத்துவக் கல்லூரி டீன் உட்பட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பட்டமளிப்பு விழா

இந்த நிகழ்வு தூங்குவதற்கு முன்னரே முதல்வர்  விஜய், நடிகராக இருந்த போது நடித்த படங்களின் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் பட்டமளிப்பு விழா துவங்கியது. மாணவர்கள் ஒவ்வொருவராகத் தங்களது பட்டங்களைப் பெற மேடை நோக்கி வந்தபோது, ”நான் தன்னந்தனி ஆளு, நீ ஏளனமா பாரு கொஞ்ச நகுந்தேனா எட்டு கோடி பேரு” என்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாடல் மிக உரத்த சத்தத்துடன் ஒலிக்கவிடப்பட்டது.

மேடையில் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் முன்னிலையிலேயே, த.வெ.க கட்சிப் பாடல் மற்றும் திரைப்பட பாடல்கள் இசைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கட்சி பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டதற்கு எதிர்க்

கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கேரளம்: புதிய மாவட்டங்கள் உருவாக்க திட்டம்; திரூர், மூவாற்றுப்புழாவில் முதற்கட்ட நடவடிக்கை!

கேரள மாநில நிர்வாகத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றமாக, புதிய மாவட்டங்கள்...

மோடி – ட்ரம்ப் என்ன பேசினார்கள்? – சசி தரூர் Vs காங்கிரஸ் வெடித்த பிரச்னை

நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர். இவர் காங்கிரஸ்காரர் தான். ஆனால், அவ்வப்போது...

`இந்தியா பிற நாடுகளின் குப்பைகளை கொட்டும் இடமாக மாற அனுமதிக்க முடியாது' – மதுரை உயர் நீதிமன்றம்

சிவகாசியைச் சேர்ந்த ஸ்ரீபதி பேப்பர் அண்ட் போர்ட்ஸ் மற்றும் ராஜராஜேஸ்வரி கிராஃப்ட்ஸ்...

ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்: மீண்டும் மூடப்பட்ட ஹார்மூஸ் வழித்தடம்! – என்ன காரணம்!

மத்திய கிழக்கு நாடான லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும்...