29
June, 2026

A News 365Times Venture

29
Monday
June, 2026

A News 365Times Venture

தென்காசி: பள்ளி படிக்கட்டுக்கு நடுவே புதைக்கப்பட்ட மின்கம்பி – அதிகாரிகள் அலட்சியத்தால் அச்சம்!

Date:

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள கொண்டலூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்காக சுமார் 17.30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, பள்ளிக்கு அருகே உள்ள காலியிடத்தில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது. இந்த நிலையில் கூடுதல் வகுப்பறை புதிய கட்டடத்துக்கு நடுவே மின்கம்பத்தின் ‘ஸ்டே ஒயர்’ புதையும்படி பள்ளிக்கட்டட பணிகள் முடிக்கப்பட்டிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மின்கம்பி
படிக்கட்டு நடுவே..

இது தொடர்பான வீடியோ ஊடகங்களில் வெளியாகி வைரலான நிலையில், இது குறித்து அப்பகுதி மக்கள் நம்மிடம் தெரிவிக்கையில், “பள்ளியின் புதிய கட்டட பணிகள் நிறைவுபெற்று கட்டடம் இன்னும் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்படவில்லை. முன்னதாக, வகுப்பறை கட்டட பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் விதம் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு அதன்பிறகு பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் பள்ளி கட்டடத்தின் படிக்கட்டுகளில் மின்கம்பத்தின் ‘ஸ்டே ஒயர்’ செல்லும்படி புதைத்து கட்டடம் கட்டப்பட்டிருப்பது அதிகாரிகளின் அலட்சியத்தை காட்டுகிறது. பள்ளிக் குழந்தைகளின் நலனை கருத்தில் கொள்ளாமல் கட்டப்பட்டுள்ளதை அதிகாரிகள் எப்படி கவனிக்காமல் விட்டார்கள் என‌ புரியவில்லை. இது சம்பந்தமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்றனர்.

தொடர்ந்து பள்ளி தரப்பில் பேசியவர்கள், “ஸ்டே ஒயர் மற்றும் மின்கம்பத்தை அகற்றுவதற்கு ஊராட்சி சார்பில் மின்வாரிய அலுவலகத்தில் வைப்புத்தொகை செலுத்தப்பட்டுள்ளது. பணிகளை உடனடியாக தொடங்கி சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவருக்கு `மரண தண்டனை'- 60 நாள்களில் வழங்கப்பட்ட தீர்ப்பு

புனே அருகில் உள்ள நஸ்ராபூர் என்ற இடத்தில் கடந்த மாதம் ஒன்றாம்...

`மக்களாகிய நீங்கள் செய்ததுதான் மிகப்பெரிய ஊழல்.!' – அமைச்சர் விஜய் பாலாஜி பேசியதென்ன?

முதலமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் பவானியில் சம...

`தொண்டை சரியில்ல' – ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை எப்போது கிடைக்கும் என்ற கேள்விக்கு அமைச்சரின் பதில்!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது த.வெ.க சார்பில் மகளிருக்கு மாதந்தோறும்...

MLA பதவியை ராஜினாமா செய்கிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சி.விஜயபாஸ்கருடன் தவெகவில் இணைகிறார்!| Exclusive

அதிமுக-வின் முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது...