13
June, 2026

A News 365Times Venture

13
Saturday
June, 2026

A News 365Times Venture

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதில் அரசின் நிலைப்பாடு என்ன? – உயர் நீதிமன்றம் கேள்வி

Date:

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் மீது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனி நீதிபதி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துவரும் நிலையில், தங்களுக்கு எதிரான உத்தரவுகளை ரத்துசெய்யக் கோரி மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில்,  இந்த மனுக்கள் நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதி ராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதால் அவகாசம் வேண்டுமென அரசு தரப்பில் கோரப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘கார்த்திகை தீபத்தின்போது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல்’ எனக் கேள்வி எழுப்பினர்.

திருப்பரங்குன்றம் தூண்

‘இதனால் யாருக்கும் பாதிப்பு இல்லை’ எனக் கூறிய நீதிபதிகள், ‘அனைத்து தரப்பு மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். சட்ட நடைமுறைகளைக் காரணம் காட்டி இந்த வழக்கை தீவிரப்படுத்தாதீர்கள்’  எனக் கூறி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது குறித்த அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க கால அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Zero FIR: குற்றம் நடந்தது ஓர் இடத்தில் என்றாலும், வேறு இடத்தில் புகாரளிக்கலாம்; என்ன நடைமுறை இது?

சில நேரங்களில் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றால், 'இது எங்கள்...

கொல்லூரில் முதல்வர் விஜய்: "எந்த விசேஷ கோரிக்கையும் அம்மனிடம் வைக்கவில்லை" – கோயில் கமிட்டி தலைவர்

கர்நாடகா மாநிலம் கொல்லூரில் இருக்கும் மூகாம்பிகை அம்மன் கோயில் மிகவும் பிரபலம்...

ஓபன் 'பார்' ஆக மாறிய பஸ் ஸ்டாப்; செய்தி வெளியிட்ட விகடன் – எச்சரிக்கை விடுத்து ஆக்ஷன் எடுத்த போலீஸ்

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பகுதியில் கடைவீதியிலேயே பேருந்துநிறுத்திற்கு அருகிலேயே மதுபானக்கடை கடை...

"70 ஆண்டுகளில் ஒரு முறை கூட வைகை அணை தூர்வாரப்படவில்லை; 2 மாதங்களில் நடக்கும்" – நிர்மல் குமார்

மமதுரையில் இன்று வைகை நதியை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் நிர்மல்...