30
August, 2026

A News 365Times Venture

30
Sunday
August, 2026

A News 365Times Venture

திருப்பத்தூர்: புதன் சந்தையை நாற்றமடிக்க வைக்கும் கோடியூர் ஏரி – நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?

Date:

சந்தை என்றாலே பரபரப்பும், மக்கள் கூட்டமும், வியாபாரிகளின் குரல்களும்தான் நினைவுக்கு வரும். ஆனால், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள புதன் சந்தையில் தற்போது நிலைமை வேறாக இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஜோலார்பேட்டை நகராட்சிக்குச் சொந்தமான கோடியூர் ஏரியை ஒட்டி, ஒவ்வொரு புதன்கிழமையும் வாரச் சந்தை நடைபெற்று வருகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து காய்கறிகள் உள்ளிட்ட தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். ஏரியை ஒட்டி சந்தை அமைந்திருப்பது இந்தச் சந்தையின் சிறப்புகளில் ஒன்றாகவும் இருந்து வருகிறது.

ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால் கோடியூர் ஏரி தற்போது குப்பைகள் தேங்கும் இடமாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏரியில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்படுவதால், கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

புதன்கிழமைகளில் சந்தைக்கு வரும் மக்கள், துர்நாற்றத்தால் மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். இதனால் சந்தைக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, ஏரியை ஒட்டி கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளும் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். நீண்ட நேரம் அப்பகுதியில் இருப்பதால் துர்நாற்றத்தைத் தாங்க முடியாத சூழல் ஏற்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

“ஏரியைச் சுற்றிலும் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க வேண்டும். ஏற்கெனவே தேங்கியுள்ள கழிவுகளை அகற்றி, ஏரியைத் தூய்மைப்படுத்த வேண்டும். மேலும், ஏரியை முறையாகத் தூர்வாரி பராமரிக்க வேண்டும்” என்பதே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது.

மக்கள் அன்றாடத் தேவைகளுக்காக கூடும் முக்கியமான சந்தைப் பகுதி என்பதால், கோடியூர் ஏரியைச் சீரமைத்து, குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுத்து, புதன் சந்தையைச் சுகாதாரமான இடமாக மாற்ற ஜோலார்பேட்டை நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மது போதையில் மகளையே கர்ப்பமாக்கிய கொடூர தந்தை: `20 ஆண்டுகள் சிறை!'- புதுக்கோட்டை  நீதிமன்றம் அதிரடி

தந்தை என்பவர் பெற்ற பிள்ளைக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய கவசம். ஆனால்,...

நேபாள வெள்ளம்: 'இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை' – இந்தியாவின் அடுத்தக்கட்ட உதவி என்ன?

கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 26), உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில்...

ஸ்டாலின் பாதுகாப்பு Z+-ல் இருந்து Z ஆக குறைப்பு; காரணம் என்ன?

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினின் பாதுகாப்பு Z+...

“நானே மாடுபிடி வீரர்தான்; நான் எப்படி ஜல்லிக்கட்டு பற்றி தவறாக பேசுவேன்!"- எம்எல்ஏ கருப்பையா

சட்டப்பேரவையில் பேசிய சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா இளைஞர்களை சீர்குலைக்கும் வகையில்...