25
April, 2025

A News 365Times Venture

25
Friday
April, 2025

A News 365Times Venture

திருப்பத்தூர்: கட்டிமுடிக்கப்பட்டும் திறக்கப்படாத நியாயவிலைக் கட்டடம்; சிரமப்படும் மக்கள்!

Date:

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாடப்பள்ளி ஊராட்சியில் கடந்த 2021 ஆம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 8.59 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த நியாயவிலைக்கடை கட்டி முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகியும், பொது மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் பொது மக்கள் நீண்ட தூரம் பயணித்து மடவாளம் பகுதியில் உள்ள சிறிய நியாய விலை கடைக்குச் சென்று பொருட்களை வாங்கி வருவதாகக் குற்றம்சாட்டுகின்றனர். 

மாடப்பள்ளி பகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்காகப் புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலைக் கட்டடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராததால், திருப்பத்தூர் டவுன் பகுதியில் உள்ள மடவாளம் பகுதிக்குச் சென்று அங்கு உள்ள நியாய விலை கடையில் உணவுப் பொருள்களை வாங்க வேண்டிய சூழல் ஏற்படுவதாகக் குற்றம்சாட்டுகின்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய அந்த ஊர் பொது மக்கள், “எங்கள் கிராமத்திற்காக நான்கு வருடங்களுக்கு முன்பு இந்த புதிய நியாய விலை கட்டடம் கட்டப்பட்டது. கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என்று கூறியிருந்தார்கள். ஆனால் இது வரையில் அந்த புதிய நியாய விலை கடை பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படவில்லை. இது சம்பந்தமாக கூட்டுறவுத்துறை அலுவலகம், வட்டாட்சியர் வரையில் நாங்கள் கோரிக்கை மனு அளித்து இருந்தோம். ஆனால் எந்த வித பயனும் இல்லை. நாங்கள் உணவுப் பொருட்களை வாங்க நெடுந்தூரம் பயணித்து மடவாளம் பகுதியில் உள்ள சிறிய அளவிலான நியாய விலை கடைக்குச் சென்று வர வேண்டி உள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க நாங்கள் நெடுந்தூரம் பயணிக்க வேண்டி உள்ளது.

எங்கள் ஊரிலேயே ஒரு பெரிய நியாய விலை கடை இருந்தும் நாங்கள் மடவாளம் நியாய விலை கடைக்குச் செல்ல வேண்டி உள்ளது. உடனடியாக எங்கள் பகுதியில் உள்ள நியாய விலை கடையைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். அப்போது தான் எங்கள் பிரச்னை தீரும்” என்றனர். 

இது குறித்து கூட்டுறவுத்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, “மாடபள்ளியில் உள்ள நியாய விலைக் கடை சில நிர்வாக காரணங்களுக்காகத் திறக்கப்படாமல் உள்ளது. கூடிய விரைவில் அதனைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர முயற்சிகளை எடுக்கிறோம்” என்று கூறினர்.

மாடபள்ளி ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருக்கும் நியாய விலை கடையை விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. நிறைவேற்றுவார்களா துறை ரீதியான அதிகாரிகள்?

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Indus River: “சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது ஓகே; நீரை எங்கு தேக்குவீர்கள்?'' -ஒவைசி கேள்வி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது...

Pahalgam: சோதனையின் போது வெடித்த தீவிரவாதிகளின் வீடுகள்; `நாங்கள் காரணம் இல்லை' கூறும் அதிகாரிகள்!

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் சம்பவத்தில் தொடர்புள்ள இரண்டு தீவிரவாதிகளின் வீடு இடிந்து...

`சொத்து குவிப்பு வழக்கில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் விடுவிப்பும் ரத்து' – உயர் நீதிமன்றம் அதிரடி

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை...

`துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசும் காவல்துறையும் மிரட்டியுள்ளது’ – குற்றச்சாட்டும் ஆளுநர் ரவி

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஊட்டி ராஜ்பவனில் துணை வேந்தர்களுக்கான மாநாடு நடைபெற்றது....