19
June, 2026

A News 365Times Venture

19
Friday
June, 2026

A News 365Times Venture

`தமிழ்நாட்டில் இந்தி தெரியாமல் இருப்பது பெரிய குறை; அரசியலைப் புறக்கணித்து..' – Zoho ஸ்ரீதர் வேம்பு

Date:

புதியக் கல்விக் கொள்கையின் மூலம் மத்திய பா.ஜ.க அரசு இந்தி மொழியை திணிக்கிறது என்றக் குற்றச்சாட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களால் முன்வைக்கப்படுகிறது. புதியக் கல்விக் கொள்கையின் வழியே இந்தி திணிக்கப்படுகிறது என முதல்வர் ஸ்டாலின் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக பா.ஜ.க – திமுக இடையே கடும் விவாதம் நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், ஜோஹோ

ஸ்ரீதர் வேம்பு தன் எக்ஸ் பக்கத்தில், “இந்தியாவில் ஜோஹோ வேகமாக வளர்ந்து வருவதால், தமிழ்நாட்டில் கிராமப்புற பொறியாளர்கள் மும்பை மற்றும் டெல்லியில் உள்ள வாடிக்கையாளர்களுடன் பணியாற்றுகிறார்கள். எங்கள் வணிகத்தின் பெரும்பகுதி இந்த நகரங்களிலிருந்தும், குஜராத்திலிருந்தும் இயக்கப்படுகிறது.

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்

தமிழ்நாட்டிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் சிறப்பாக சேவை செய்வதையே சார்ந்துள்ளது. இந்தி தெரியாமல் இருப்பது பெரும்பாலும் தமிழ்நாட்டில் எங்களுக்கு ஒரு பெரிய குறைதான். ஆனால் இந்தி கற்றுக்கொள்வது எங்களுக்கு புத்திசாலித்தனம். கடந்த 5 ஆண்டுகளில் நான் இந்தியை இடைவிடாமல் படிக்கக் கற்றுக்கொண்டேன், இப்போது பேசப்படும் விஷயங்களில் சுமார் 20% என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருப்பதால், தமிழ்நாட்டில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் இந்தி கற்றுக்கொள்வதில் புத்திசாலிகளாக இருப்பார்கள். அரசியலைப் புறக்கணித்து, மொழியைக் கற்றுக்கொள்வோம்! இந்தி கற்றுக்கொள்வோம்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

முதல்வரின் முகத்துக்கு நேராக திமுக எம்.எல்.ஏ சொன்ன அந்த வார்த்தை; சீறிய ஆதவ் – சலசலப்பான சட்டமன்றம்!

ஆளுநர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று...

7 எம்.எல்.ஏக்களுக்கு 5 பேருந்துகள்! – MLA ஸ்பெஷல் பஸ் நடைமுறை தேவையா?

சட்டமன்றக் கூட்டத்தொடர்கள் நடக்கும் போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கென சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்....

தவெகவில் இணைந்த சி.மகேந்திரன்: 'அமைப்பு விதிகளுக்கு விரோதமாக செயல்பட்டவர்' – CPI கருத்து

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் சி.மகேந்திரன் நேற்று தவெகவில் இணைந்தார்....

"மோடி, ஜின்பிங் எனக்கு பிடித்தவர்கள்; நெதன்யாகுவை கொஞ்சம் நிதானமாக.!" – ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்க செய்தி நிறுவனமான Axios-க்கு பிரத்யேக பேட்டி...