முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையின்படி, தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில், `பால்வளத்துறை, காதி மற்றும் கிராம தொழில் வாரியம் ஆகிய இலாகாக்களைக் கவனித்துவரும் அமைச்சர் ராஜகண்ணப்பனிடமிருந்து, காதி மற்றும் கிராம தொழில் வாரியம் இலாகாக்கள், வனத்துறை அமைச்சர் பொன்முடிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொன்முடி வசமிருந்த உயர் கல்வித்துறை கோவி. செழியனுக்கு மாற்றப்பட்டு, வனத்துறை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாகக் காதி மற்றும் கிராம தொழில் வாரியம் இலாகாக்கள் அவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில நாள்களில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், பொன்முடிக்கு திடீரென கூடுதல் இலாகா ஒதுக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs