21
March, 2026

A News 365Times Venture

21
Saturday
March, 2026

A News 365Times Venture

`காஸாவில் உதவியின்றி 14,000 குழந்தைகள் இறக்க நேரிடும்' – ஐ.நா வேதனை; இஸ்ரேலை எச்சரிக்கும் நாடுகள்

Date:

சரியான நேரத்தில் காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள் செல்லவில்லையென்றால் அடுத்த 40 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் இறக்க நேரிடும் என ஐ.நா-வின் மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர் தெரிவித்திருக்கிறார்.

நேற்று பிபிசி ரேடியோவிடம் பேசிய அவர், “இஸ்ரேல் 11 வாரங்களாக காஸாப் பகுதியை முற்றுகையிட்டிருக்கிறது. அதனால் ஏற்பட்ட மோசமான சூழ்நிலையால் எங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளையோ, பெரியவர்களையோ சென்றடைய முடியவில்லை.

காஸா

கடந்த 19-ம் தேதி மனிதாபிமான உதவிக்காக ஐந்து லாரிகள் மட்டுமே காசாவிற்குள் நுழைந்தது. இதைக் கடலில் ஒரு துளி என ஒப்பிடலாம்.

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாத தாய்மார்களுக்கு உணவளிக்க முயற்சிக்கும்போது, நாங்கள் எல்லா வகையான ஆபத்துகளையும் எதிர்கொள்கிறோம். அடுத்த 48 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் 14,000 குழந்தைகளை முடிந்தவரை காப்பாற்ற விரும்புகிறேன். உலக நாடுகளும் காஸா பகுதியை மனிதாபிமான உதவிகளால் நிரப்ப வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

உணவு மற்றும் தண்ணீருக்காக காத்திருக்கும் குழந்தைகள் – காஸா

சர்வதேச கண்டனம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காஸாவில் தொடர்ந்து இடைவிடாமல் நடத்திவரும் தாக்குதலைக் கண்டித்து UK, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் கூட்டு அறிக்கையை வெளியிட்டனர்.

இங்கிலாந்து தொழிலாளர் கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், கனேடிய பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் கையெழுத்திட்ட இந்த அறிக்கையில், இஸ்ரேல் தனது தற்போதைய போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"நான் கும்பிட்டா முகத்தைத் திருப்பிடுவாங்க மம்தா பானர்ஜி" – கொல்கத்தா ஐஏஎஸ் அதிகாரி முருகன் பேட்டி

கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மத்திய அரசின் தேயிலை வாரியத்தில்...

58 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ஜோதிடரை, கடவுளுடன் ஒப்பிட்ட பெண்கள் கமிஷன் தலைவி! பகீர் பின்னணி

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் அசோக் கராட் என்பவர் தன்னிடம் ஜோதிடம் கேட்க...

"CSK-விற்கு ஏன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் விளையாடவில்லை?" – ஸ்டாலினைப் போராடச் சொல்லும் TTV

கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இப்போது...

"அவர் இங்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்து உடனே வந்தேன்" – சிபிஎம் அலுவலகத்தில் வைகோ; பின்னணி என்ன?

திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுப்பறி நீடித்து...