இன்னும் சில மணி நேரத்தில் 2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவடைய உள்ளது.
சிறப்புத் தீவிர திருத்தத்திற்குப் பிறகு, இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. சிறப்புத் தீவிர திருத்தத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் 5.73 கோடி மக்கள் தகுதியுள்ள வாக்காளர்கள்.
இதில் 14.6 லட்சம் பேர் இந்தத் தேர்தலில் முதல் முறை வாக்காளர்கள். இந்த எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கான முதல் முறை வாக்காளர்கள் எண்ணிக்கை ஆகும்.
இன்னும் சில மணிநேரத்தில் இன்று தமிழ்நாட்டில் எத்தனை பேர் வாக்களித்துள்ளனர்… எத்தனை சதவிகிதம் வாக்கு பதிவாகியுள்ளது ஆகியவை தெரிந்துவிடும்.
தமிழ்நாட்டில்…
2011-ம் ஆண்டு 78.01 சதவிகித வாக்கு பதிவாகியிருந்தது.
2016-ம் ஆண்டு 74.81 சதவிகிதமும், 2021-ம் ஆண்டு 73.63 சதவிகிதமும் வாக்கு பதிவாகியிருந்தது.
இன்று 80 சதவிகித வாக்கு பதிவாகியிருந்தால் தான், 2021-ம் ஆண்டு வாக்களித்த மக்களின் எண்ணிக்கையை சமன் செய்ய முடியும்.
முன்னரே, சொன்னதுபோல, இது சிறப்புத் தீவிர திருத்தத்திற்குப் பின் நடக்கும் தேர்தல் ஆகும்.
இந்த நடைமுறையில், இறந்தவர்களின் பெயர்கள், இரு முறை பதிவான பெயர்கள், தகுதியில்லாத நபர்களின் பெயர்கள் என பலர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர்.
இதனால், அதிக சதவிகித வாக்குகள் பதிவானாலும், வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.

இதில் இன்னும் ஒரு சிக்கல் என்னவென்றால், இதுவரையிலான தேர்தல்களில், முதல் முறை வாக்காளர்கள் மற்றும் பெண்களின் வாக்குகள் மொத்த எண்ணிக்கையை விட, குறைவாக இருக்கும்.
இதனாலும், வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் சிக்கல் எழும்.
இன்று 70 – 72 சதவிகிதத்திற்குள் வாக்கு சதவிகிதம் பதிவாகியிருந்தால், வாக்கு சதவிகிதத்தைப் பார்த்தால், கடந்த தேர்தலின் சதவிகிதத்தை சமன் செய்திருக்கும். ஆனால், குறைந்த வாக்காளர்களே இன்றைய தேர்தலில் வாக்களித்துள்ளனர் என்று பொருள். காரணம், இப்போது வாக்காளர் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.




