30
May, 2026

A News 365Times Venture

30
Saturday
May, 2026

A News 365Times Venture

இனி ரூபாய் நோட்டு பேப்பரில் வராது; 'பிளாஸ்டிக்கில்' வரப்போகிறது? – RBI-க்கு ஏன் இந்த யோசனை?

Date:

இதுவரை இந்திய ரூபாய் நோட்டுகளைத் தாள்களில் தானே பார்த்திருக்கிறோம். இனி பிளாஸ்டிக்கில் பார்த்தாலும் பார்ப்போம். இந்திய ரிசர்வ் வங்கி இதற்கான யோசனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது புழக்கத்தில் இருக்கும் தாள், எளிதாக கிழிந்துவிடுகிறது. இதனால் மீண்டும் அச்சிடும் செலவும் அதிகமாக உள்ளது.

இதையெல்லாம் தவிர்க்கத் தான், பாலிமரில் ரூபாய் நோட்டை அச்சிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

பணம்

இந்திய ரூபாயை தாளில் இல்லாமல், பாலிமரில் அச்சிடுவதால்…

> 2025-ம் ஆண்டில், மத்திய அரசுக்கு இந்திய ரூபாயை அச்சிடுவதற்கு சுமார் ரூ.5 ஆயிரம் கோடி ஆகியிருக்கிறது. பாலிமரில் ரூபாய் தாள்களை அச்சிட்டால், இந்தச் செலவு குறையும்.

> அடுத்ததாக, பாலிமரில் அச்சிடும் ரூபாய் கிழியாமல், பாழாகாமல் நீண்ட காலத்திற்கு பயன்படும் என்பதால், அதிலும் கணிசமான செலவு மிச்சமாகும்.

> இந்தியாவில் ஏ.டி.எம்கள் அப்கிரேட் செய்யப்பட்டுவிட்டன. அதனால், பாலிமரில் ரூபாய் அச்சிடப்பட்டாலும், அதில் சிக்கல் எழாது.

முன்பே…

2012-ம் ஆண்டு, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோதே, பாலிமரில் ரூபாயை அச்சிடுவதற்கான பிளான் கொண்டுவரப்பட்டது. ஆனால், தொழில்நுட்பப் பிரச்னைகளால் இந்த முடிவு கைவிடப்பட்டது.

ஆனால், இப்போது அந்தப் பிரச்னைகள் எட்டிப்பார்ப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.

தற்போது உலக அளவில் 60 நாடுகள் பாலிமர் பணத்தைப் பயன்படுத்தி வருகின்றன. 1988-ம் ஆண்டு ஆஸ்திரேலியா முதன் முறையாக இந்த வகையான பணத்தை அறிமுகப்படுத்தியது.

அதன் பின், சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகள் பாலிமர் பணத்தைப் பயன்படுத்தி வருகிறது.

இந்தப் பட்டியலில் விரைவில் இந்தியாவும் இணையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கர்நாடகா விறுவிறுப்பு: 'முதல்வர்' சிவக்குமாருக்கு இரண்டு துணை முதல்வர்களா? கார்கே நகர்த்தும் காய்!

சட்டமன்றத் தேர்தல் முடிந்த தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளாவிலேயே இன்னும் பரபரப்பு...

'எப்பேற்பட்ட அதிகாரிகள் இருந்த துறை தெரியுமா?' – அருண் ஐ.பி.எஸ்ஸை கடுமையாக கண்டித்த நீதிபதிகள்!

தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா குண்டர் சட்டத்தில் சிறையில்...

ஈரான் போர் முடிவுக்கு ஆசைப்படும் ட்ரம்ப்; மனசு வைக்காத ஈரான் – ட்ரம்பிற்கு 'தேர்தல் பயம்'?

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, ஈரானில் போர் தொடங்கியது வேண்டுமானால், அமெரிக்க...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் நள்ளிரவில் திடீர் ஆய்வு – காரணம் என்ன?

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சம்பத்...