6
June, 2026

A News 365Times Venture

6
Saturday
June, 2026

A News 365Times Venture

“இந்தியாவின் தேசிய மொழி எது?'' – எம்.பி கனிமொழி பதிலால் அரங்கம் அதிர கைதட்டிய குழு!

Date:

இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்­றும் அதனை யாரும் புறக்க­ணிக்கக் கூடாது என்­றும் பா.ஜ.க தொடர்ந்து சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். தேசியக் கல்விக் கொள்கையின் மூலம் இந்தியை நாடு முழுவதும் கொண்டு செல்ல திட்டமிட்டு செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

நாடா­ளு­மன்ற மக்­களவை­ தலை­வர் ஓம் பிர்லா சமஸ்­கி­ரு­தம்­தான் நாட்டின் மூல­மொழி என்று அவை­யிலேயே குறிப்­பிட்டதும் சர்ச்சையானது.

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்

இப்படியாக இந்தியாவின் தேசிய மொழி குறித்து பல்வேறு விவாதங்கள் வலம் வருகிறது. அதே நேரம் மாநிலங்களின் கூட்டுதான் இந்தியா. எனவே, பல்வேறு மொழிகள் இருக்கும் இந்தியாவில் தேசிய மொழி என ஒன்று இல்லை. அரசின் அலுவலக மொழிதான் இந்தியும் ஆங்கிலமும் என எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.

இந்த நிலையில், ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தான்தான் பொறுப்பு எனக் கூறிய இந்தியா மே 7 அன்று, பாகிஸ்தானுக்குள் பல இடங்களில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது இந்தியா.

அதைத் தொடர்ந்து, தீவிரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு குறித்து உலக நாடுகளுக்கு தெளிவுபடுத்த இந்தியாவின் சார்பில் எம்.பிக்கள் அடகிய தூதுக்குழு பல்வேறு நாடுகளுக்கு பயணித்துவருகிறது.

கனிமொழி
கனிமொழி

அதன் ஒருபகுதியாக, தி.மு.க எம்.பி. கனிமொழி உள்ளிட்ட இந்திய பிரதிநிதிகள் ஸ்பெயின் சென்றுள்ளனர். ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் ஸ்பெயின் நாட்டின் பிரதிநிதிகளுடன் இந்திய தூதுக்குழுவினர் கலந்துரையாடினர்.

அப்போது, இந்தியாவின் தேசிய மொழி எது என அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எம்.பி கனிமொழி, “இந்தியாவின் தேசிய மொழி வேற்றுமையில் ஒற்றுமை” என பதிலளித்தார். இந்த பதிலுக்குப் பிறகு சில நிமிடங்கள் அரங்கம் கைதட்டலால் நிரம்பியது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

CJP: பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த இளைஞர்கள் – அவர்கள் சொல்லும் நோக்கம் என்ன?

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கு...

"அதிமுக-வுக்கு ஆதவ் அர்ஜுனா வர முயன்றார்; அதிமுகவை பற்றி பேச..!"- கே.பி முனுசாமி பதில்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி சம்பத், உடுமலை...

தேனி: மலை கிராமத்திற்கு முதல் முறையாக பேருந்து சேவை; ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்!

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் கொட்டக்குடி ஊராட்சி அமைந்துள்ளது....

திருப்பரங்குன்றம் தூண் விவகாரம்: “அமைச்சரின் பேச்சைக் கண்டிக்கிறேன்" – தமிழிசை காட்டம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தனி நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில்...