27
August, 2026

A News 365Times Venture

27
Thursday
August, 2026

A News 365Times Venture

அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி; ட்ரம்ப் விதித்த வரியை Refund செய்த அமெரிக்கா; எவ்வளவு தெரியுமா?

Date:

2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உலக நாடுகளைத் துரத்தி வந்த பிரச்னைகளில் ஒன்று – பெரும்பாலான உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த ‘பரஸ்பர வரி’.

இந்த வரியை அமெரிக்காவின் ‘சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 (IEEPA)’-ன் கீழ் விதித்திருந்தார் ட்ரம்ப்.

ஆனால், ட்ரம்பின் இந்த வரி விதிப்பு செல்லாது என்று கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்துவிட்டது அமெரிக்க உச்ச நீதிமன்றம். மேலும், அதுவரை வசூலித்திருந்த வரியும் அவரவருக்குத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

அதுவரை ட்ரம்ப் நிர்வாகம் இறக்குமதியாளர்களிடம் இருந்து கிட்டத்தட்ட 166 பில்லியன் டாலர்கள் வசூல் செய்திருந்தது.

ட்ரம்ப் – பரஸ்பர வரி

இந்த வழக்கு குறித்து அமெரிக்காவின் சுங்கத் துறை அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

அதில், “சாத்தியமான மற்றும் சான்றளிக்கப்பட்ட ரீஃபண்ட் என ஒதுக்கப்பட்ட 128.68 பில்லியன் டாலர் வரி வருவாயில் நான்கில் மூன்று பங்கிற்கும் அதிகமான தொகையைத் திரும்ப வழங்கப்பட்டுவிட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர் ரீஃபண்ட் செய்யப்பட்டுவிட்டது என்று கூறியுள்ளது அமெரிக்க சுங்கத்துறை.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கார்ட்டூன்..!

Source link

`பரந்தூர் விமான நிலையத்திற்குப் பதிலாக மீனம்பாக்கத்தில் 5-வது முனையம்'- எம்.பி சச்சிதானந்தம் யோசனை!

திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு பகுதியில் செயல்பட்டு வந்த பாஸ்போர்ட் அலுவலகம்...

ஈரானுடன் வணிகம் செய்த 4 இந்திய நிறுவனங்கள்; இப்போது அமெரிக்காவின் ‘தடை’ வலையில்! என்ன நடக்கும்?

ராணுவத் தாக்குதலிலிருந்து பொருளாதாரத் தாக்குதலுக்கு மாறியுள்ளது ஈரான் போர். அமெரிக்க...