17
May, 2025

A News 365Times Venture

17
Saturday
May, 2025

A News 365Times Venture

'அமித் ஷா போன மாநிலங்கள் எல்லாமே வெற்றிதான்; எல்லாம் அவர் பார்த்துப்பார்' – நயினார் நாகேந்திரன்

Date:

கோவை காளப்பட்டி தனியார் மண்டபத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அந்தக் கட்சியினர் சார்பில் வரவேற்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், “கூட்டணி, எத்தனை சீட் என்பதைப் பற்றி யாரும்  கவலைப்பட வேண்டாம்.

நயினார் நாகேந்திரன்

தேசிய தலைமை பார்த்துக் கொள்ளும்!

அது குறித்து யாரும் சமூகவலைதளங்களில் பதிவிட வேண்டாம். அதை தேசிய தலைமை பார்த்துக் கொள்ளும். திமுகவிடம் இருந்து பாஜக தொண்டர்களை பாதுகாப்பது தான் என்னுடைய வேலை. சீட் பற்றி எல்லாம் அமித்ஷா பார்த்துக் கொள்வார்.

பொதுவாக சட்டசபையில் நான் அமைதியாக பேசுவேன். ஆனால் வானதியின் பேச்சு திமுகவினர் அலறும் வகையில் இருக்கும். அவர் பேசினாலே அமைச்சர்கள் அலர்ட் ஆகிவிடுவார்கள். நம்முடைய செல்போன்களை எல்லாம் ஆளும்கட்சியினர் டேப் செய்கின்றனர். அவர்கள் நம் நடவடிக்கைகளை கண்காணிக்கிறார்கள். எனவே  எச்சரிக்கையாக பேசுவது நல்லது.

அமித்ஷா
அமித்ஷா

அமித்ஷா  ஒரே நாளில் எல்லா வேலையையும் முடித்து விட்டார். அமித்ஷா, ‘நான் அடிக்கடி தமிழகம் வருகிறேன். நான் பார்த்துக் கொள்கிறேன்.’ என சொல்லியுள்ளார். அதனால் நாம் நம்முடைய பூத்களில் வேலைகளை பார்த்தால் போதும். இரட்டை இலையோடு அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களுடன் சட்டமன்றம் செல்வோம்.

இதற்கு முன்பு அமித்ஷா போன மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. இப்போது அவர் தமிழகத்துக்கு வந்துள்ளார். அதிமுகவினருடன் இணைந்து ஒன்றாக பயணிக்க வேண்டும். நமது கூட்டணி கட்சி ஆளும் கட்சியாக வர வேண்டும். இனியொரு முறை திமுக ஆட்சிக்கு வந்தால் நம்மை பாதுகாக்க முடியாது.

அண்ணா அறிவாலயம்

மக்கள் விரோத ஆட்சியை திமுக நடத்தி வருகிறது. மக்களிடம் அதிருப்தி நிலவி வருகிறது. எனக்கு முன்பு அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கட்சியை வலுப்படுத்தி உள்ளனர்.  தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு ஒவ்வொரு தொண்டரும் பாடுபட வேண்டும்.” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

NEP: “கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதுதான் ஒரே வழி..'' – முதல்வர் ஸ்டாலின்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய `தேசிய கல்விக் கொள்கை...

புதின், ஜெலன்ஸ்கி இல்லாமல் நடந்த ரஷ்யா, உக்ரைன் பேச்சுவார்த்தை.. இனி என்ன நடக்கும்? | Explained

'ரஷ்யா - உக்ரைன் போர் நிற்கப்போகிறதா?', 'புதினும், ஜெலன்ஸ்கியும் நேரில் சந்தித்து...

NEP: `தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை' – அன்பில் மகேஷ் எழுதிய புத்தகத்தை வெளியிட்ட முதல்வர்!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய `தேசிய கல்விக் கொள்கை...

“எரி உலை `கொள்கை முடிவு' அல்ல, எங்களைக் `கொல்ற முடிவு' அது!'' – கொதிக்கும் கொடுங்கையூர் மக்கள்

சென்னை மாநகரில் தினமும் சேர்கின்ற குப்பைகளை பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் கொட்டி...