20
February, 2026

A News 365Times Venture

20
Friday
February, 2026

A News 365Times Venture

விஜய்: 23-ம் தேதி வேலூர் வருகை… பந்தல், நாற்காலி வசதியுடன் போலீஸ் 20 நிபந்தனைகள்!

Date:

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரியில் வரும் 23-ம் தேதி, த.வெ.க தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடத்துவதற்காகத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்கான அனுமதி கோரி, த.வெ.க நிர்வாகிகள் வேலூர் மாவட்ட எஸ்.பி சிவராமனிடம் மனு அளித்திருக்கின்றனர். இதையடுத்து, கூட்டம் நடக்கவிருக்கும் இடத்தையும் நேரில் பார்வையிட்டிருக்கிறார் எஸ்.பி சிவராமன்.

அனுமதி வழங்கும் முன்பு 20 நிபந்தனைகளையும் கடைப்பிடிக்கச் சொல்லி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதுவரை திறந்தவெளி மைதானத்தில் பந்தல், நாற்காலிகள் போடாமலேயே விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. இதனால், விபரீத நிகழ்வுகளும் அரங்கேறின.

பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

எனவே, த.வெ.க தொண்டர்களும், பொதுமக்களும் வெயிலில் நிற்காமல் இருக்கவும், விபரீதங்களைத் தவிர்க்கவும் முதன்முறையாக வேலூர் கூட்டத்தில் நாற்காலிகள் வசதியுடன் பந்தல் அமைக்கப்படவிருக்கிறது.

காலை 10 மணி முதல் மதியம் 1 மணிக்குள்ளாக கூட்டத்தை நடத்தி முடிக்கவும் போலீஸார் அறிவுறுத்தியிருக்கின்றனர். இதற்காக, 33 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு சமன் செய்யப்பட்டிருக்கிறது. வாகனங்களை பார்க்கிங் செய்யவும் தனி இடவசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதையொட்டி, இன்று காலை சிறப்புப் பூஜைகளுடன் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், த.வெ.க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"அந்தத் தொகுதிகள்தாம் வேண்டும்" – அமைச்சர்களின் தொகுதிகளைக் கேட்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் தீர்மானம்?

தமிழக அமைச்சரவையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும், தி.மு.க-வில் முதன்மைச் செயலாளராகவும் இருப்பவர்...

இந்தியாவில் குறைந்த ஊழல்; ஆனால், ஒரு கவலைக்குரிய விஷயம்! – ஜெர்மனி நிறுவனத்தின் அறிக்கை சொல்வதென்ன?

சமீபத்தில், ஜெர்மனி பெர்லினைச் சேர்ந்த 'Transparency International' என்ற அரசு சாரா...

"ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது!" – திமுகவில் இணைந்த தேமுதிகவை விமர்சித்த பாஜக

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக...