13
June, 2026

A News 365Times Venture

13
Saturday
June, 2026

A News 365Times Venture

`முன்னுரிமை அடிப்படையில் குற்றங்களை கட்டுப்படுத்த..!'- புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்

Date:

தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-யாக (DGP) மகேஷ் குமார் அகர்வால் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். தனது புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டவுடன் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “எனக்கு இந்த உயரிய வாய்ப்பை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு மக்களுக்குச் சேவை செய்வதற்கான இந்த வாய்ப்பை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்துவேன். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதே காவல்துறையின் முதன்மை நோக்கமாக இருக்கும். குறிப்பாக, தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தைக் முற்றிலுமாகக் கட்டுப்படுத்துவதற்கும், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

மகேஷ் குமார் அகர்வால் – முதல்வர் விஜய்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு காவல்துறை சமரசமின்றிச் செயல்படும். அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதே இந்தத் துறையின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இருக்கும். வளர்ந்து வரும் தொழில்நுட்பக் காலத்தில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள சைபர் குற்றங்களை முற்றிலும் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்துத் தீவிர நடவடிக்கைகளும் விரைந்து எடுக்கப்படும். தமிழ்நாடு காவல்துறையின் இந்த அதிரடி முயற்சிகள் அனைத்தும் முழுமையாக வெற்றிபெற வேண்டும் என்றால், அதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். காவல்துறையின் நடவடிக்கைகளுக்குப் பொதுமக்களும், ஊடகவியலாளர்களும் தங்களின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் தொடர்ந்து வழங்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஓபன் 'பார்' ஆக மாறிய பஸ் ஸ்டாப்; செய்தி வெளியிட்ட விகடன் – எச்சரிக்கை விடுத்து ஆக்ஷன் எடுத்த போலீஸ்

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பகுதியில் கடைவீதியிலேயே பேருந்துநிறுத்திற்கு அருகிலேயே மதுபானக்கடை கடை...

"70 ஆண்டுகளில் ஒரு முறை கூட வைகை அணை தூர்வாரப்படவில்லை; 2 மாதங்களில் நடக்கும்" – நிர்மல் குமார்

மமதுரையில் இன்று வைகை நதியை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் நிர்மல்...

`சாதி மறுப்புத் திருமணங்களும், தொடரும் ஆணவக் கொலைகளும்!' – கர்நாடகாவைப் பின்பற்றுமா தமிழ்நாடு?

சாதியும் - திருமணமும்அண்ணல் அம்பேத்கர், 'சாதி மறுப்புச் சிந்தனை' (Annihilation of...

'அமைதி ஒப்பந்தத்தின் இறுதி வடிவம்' – அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை குறித்து பாகிஸ்தான் பிரதமர்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் அமைதி ஒப்பந்த...