16
September, 2026

A News 365Times Venture

16
Wednesday
September, 2026

A News 365Times Venture

"மதுவிலக்கு துறையில் தவறு செய்பவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை" – அமைச்சர் விக்னேஷ் உறுதி

Date:

கோவை – பொள்ளாச்சி சாலையில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் அமைச்சர்கள் மதன்ராஜா, விக்னேஷ் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் சென்று ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் மதன்ராஜா, ”மூலப் பொருட்கள் விலை உயர்வு என்பது இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது அல்ல, அது உலகளாவிய விஷயம். அண்மையில் நடந்த போர் காரணமாகவும், மூலப்பொருட்கள் விலை அதிகரித்தது.

அமைச்சர்கள் மதன்ராஜா, விக்னேஷ்

அது நிலையானது அல்ல, நிச்சயமாக அதுவும் மாறும். மின்சார நிலை கட்டணத்தைக் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பெண் தொழில் முனைவோர்களுக்காக 10 தொழில் பேட்டைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை தங்க நகை தொழில் பூங்கா கட்டுமான பணிகள் குறித்து ஒரு மாதத்திற்கு முன்பே ஆய்வு செய்தோம். சிட்கோ தொழில் பேட்டையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால் பல்வேறு இடங்களில் பராமரிப்பு வேலைகள் செய்ய வேண்டிள்ளது. பராமரிப்புப் பணிகளால் சில இடங்களில் மின்தடை ஏற்படலாம். பராமரிப்புப் பணிகள் முடிந்தவுடன் அங்கு மின்சாரம் மிகவும் நன்றாக இருக்கிறது” என்றார்.

அமைச்சர்கள் மதன்ராஜா, விக்னேஷ்
அமைச்சர்கள் மதன்ராஜா, விக்னேஷ்

தொடர்ந்து பேசிய அமைச்சர் விக்னேஷ், ”மதுவிலக்கு துறையில் தவறு செய்ததால் சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

அதில் பாரபட்சம் காட்டப்படாது. ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகள் முன்வைக்க வேண்டும். சிலர் கடைநிலை தொழிலாளர்களிடம் மிரட்டி பணம் பறிப்பதற்காக வீடியோ எடுப்பதாக தொழிலாளர்கள் தரப்பிலிருந்து புகார்கள் வருகிறது.

எனக்கு அழுத்தம் வருகிறதா எனத் தெரியாது. ஆனால் நல்லது செய்கிறபோது, சும்மா இருப்பவர்கள் அழுத்தங்கள் கொடுக்கத்தான் செய்வார்கள். முடிந்ததை அவர்கள் செய்யட்டும் பார்த்துக் கொள்ளலாம். தி.மு.க-வினர் முதல்வரைக் கடுமையாக விமர்சித்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதே சமயம் இதைப்பற்றி பேசுவதற்கு கட்சியிலிருந்து செய்தி தொடர்பாளர்கள் இருக்கிறார்கள், அவர்கள் அதைப் பற்றி பேசுவார்கள்” எனத் தெரிவித்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

UPI பரிவர்த்தனைகளுக்கு ரூ.2,000 வரை 'நோ' கட்டணம் – மத்திய அரசு விளக்கம்; அதற்கு மேல்?

காசு, பணத்தையெல்லாம் மறந்து, டிஜிட்டல் பேமென்ட்டுக்கு பெரும்பான்மையான இந்தியர்கள் மாறி பல...

“தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் போல வேண்டுமென்று வடநாட்டில் ஏங்குகிறார்கள்"- அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின்...

"இது தான் தவெக சொன்ன மாற்றமா?" – தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து கனிமொழி கேள்வி

தமிழ்நாட்டில் அன்றாடம் அரங்கேறும் கொலைச் சம்பவங்களால் தவெக அரசின் சட்டம் ஒழுங்கு...

`ஆஜராக வேண்டியவரே விசாரிப்பதா? மரபு மீறுவதில் திமுக ரூட்டில் தவெக‌' – முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமார்

நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாளில் உரிமைக் குழு,...