3
May, 2026

A News 365Times Venture

3
Sunday
May, 2026

A News 365Times Venture

`பாகிஸ்தான் – சீனா உறவு எப்படி உள்ளது?' – வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில்!

Date:

ஜெர்மன் பத்திரிகைக்கு கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் – சீனா உறவு குறித்து பேசியுள்ளார்.

“உங்களுக்கே தெரியும், இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதலின் போது, பாகிஸ்தான் பயன்படுத்திய பல ஆயுதங்கள் சீனாவில் இருந்து வந்தது தான். இரு நாடுகளும் மிக நெருக்கமான உறவைக் கொண்டது. இதில் இருந்தே நாம் தெரிந்துகொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.

ஜெய்சங்கரிடம், ‘இந்தியா – பாகிஸ்தான் பிரச்னையில் அணு ஆயுதப் பயன்பாடு குறித்து யோசிக்கப்பட்டதா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “அணு ஆயுத பயன்பாடு பற்றி எப்போதுமே யோசிக்கப்படவில்லை. எங்கள் பகுதியில் (தெற்காசியா) எப்போது பிரச்னை ஏற்பட்டாலும், அணு ஆயுதப் பிரச்னை ஏற்படும் என்கிற பிம்பம் உள்ளது.

Jaishankar

இது என்னை மிகவும் தொந்தரவு செய்கிறது. ஏனெனில், இது தீவிரவாதம் போன்ற கொடூர நடைமுறைகளை ஊக்குவிக்கிறது” என்று பதிலளித்துள்ளார்.

‘இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்திற்கு அமெரிக்காவிற்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்களா?’ என்ற கேள்விக்கு, “தாக்குதல் நிறுத்தத்திற்காக நான் யாருக்கு நன்றி சொல்ல வேண்டும்? நான் இந்திய ராணுவத்திற்கு நன்றி சொல்கிறேன். காரணம், அவர்களின் நடவடிக்கையால் தான் பாகிஸ்தான், ‘தாக்குதலை நிறுத்த தயார்’ என்று கூறியது” என்று தெரிவித்துள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு; தயார் நிலையில் வாக்கு எண்ணும் மையங்கள்

தமிழக புதுச்சேரி, கேரளா, மற்றும் அஸ்ஸாம் ஆகிய மூன்று மாநில சட்டமன்றத்...

`மனக்குமுறல்கள் போராட்டமாக வெடிப்பது இயல்புதான்' – கோவையில் செல்வப்பெருந்தகை பேட்டி

தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பாக 2026 சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது....

'தவெக-விடம் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு வலிமை இல்லை' – திருமாவளவன் பேச்சு

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணி தான் வெற்றி...

"சில தொகுதிகளில் விசிக தோழர்களிடம் ஒற்றுமை குறைவு" – திருமாவளவன் வருத்தம்

நாளை மறுநாள் (மே 4), தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும்...