பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான, சுமார் 100 கோடி மதிப்புள்ள தர்ம சாசன நிலத்தை நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி, போலி ஆவணம் தயாரித்து வெறும் 2 கோடிக்கு மோசடியாகப் பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் நிலத்தை வாங்கிய வெள்ளதுரை, சேதுபதி மற்றும் நிலத்தை விற்ற முருகதாஸ் ஆகியோ மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளன.
தொடர்ந்து மாவட்ட பதிவாளர் சசிகலா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணையானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இரவில் திண்டுக்கல் லிங்கா அவென்யூவில் உள்ள சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீடு, உடுமலை பாப்பன்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை மற்றும் பழனி டி.கே.என். புதூரைச் சேர்ந்த சேதுபதி ஆகியோரின் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் முன் ஜாமீன் பெற்றுள்ள நிலையில் மற்ற மூவரும் தலைமறைவாக உள்ளனர்.




