தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்த திராவிடக் கட்சிகளைவிட கூடுதல் தொகுதிகளை வென்று, தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார் த.வெ.க தலைவர் விஜய்.
கடந்த 10-ம் தேதி பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்ட நிலையில், அவருடன் 9 அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், நேற்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், மொத்தம் 32 அமைச்சர்கள் பதவியேற்றனர். பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாக்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதே நேரம் தவெக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி என இரு கட்சிகளும் இடம்பெறுகின்றன என்ற செய்தி வெளியானது. ஆனால், இதை இரு கட்சிகளும் ஆலோசித்து வருவதாகவே தெரிவித்தனர்.
நீண்ட ஆலோசனைக்குப் பிறகு இரு கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெறுகின்றன. அதன் அடிப்படையில், இன்று ஆளுநர் மாளிகையில் விசிக-வின் திண்டிவனம் எம்.எல்.ஏ வன்னி அரசுக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பாபநாசம் எம்.எல்.ஏ ஷாஜகானுக்கும் ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.




