12
July, 2025

A News 365Times Venture

12
Saturday
July, 2025

A News 365Times Venture

'தமிழ்த்தேசியவாதிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினால் சட்ட ஒழுங்கு கெடுமா? – அரசுக்கு வேல்முருகன் கேள்வி

Date:

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரான வேல்முருகன் புதுக்கோட்டையில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது, ‘தமிழ்த்தேசிய போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடுமா?’ என அரசை நோக்கி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

வேல்முருகன்

பத்திரிகையாளர்களிடம் பேசிய வேல்முருகன், ‘கனிமவளக் கொள்ளை இயற்கைவளக் கொள்ளைக்கு எதிராக எப்போதுமே நின்றிருக்கிறோம். புதுக்கோட்டையில் ஜகபர் அலி கொல்லப்பட்டதற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம். தவாக சார்பில் அவரின் குடும்பத்தினரை சந்தித்து 1 லட்ச ரூபாய் நிதி வழங்கவிருக்கிறோம். அதேமாதிரி, அவரின் கொலையில் சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் காவல்துறை விரைந்து கைது செய்ய வேண்டும். தமிழ்த்தேசிய போராளியான முத்துகுமாரின் 14 வது ஆண்டு நினைவேந்தல் வீரவணக்கத்திற்காகத்தான் புதுக்கோட்டை வந்திருக்கிறேன்.

தமிழ்த்தேசிய போராளிகளுக்கு வீர வணக்கம் செலுத்தினால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடுமா? உயர் நீதிமன்றம் வரை சென்றுதான் வீரவணக்கம் செலுத்த அனுமதி பெற வேண்டியிருக்கிறது. காவல்துறையும் அதை கையில் வைத்திருக்கும் முதல்வரும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

வேல்முருகன்

விஜய் கேட்காமலேயே ஆளுநரை அவர் சந்தித்த ஒரு சில வாரங்களில் ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதில் அரசியல் இருப்பதாகவே பார்க்கிறேன்.’ என்றார்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உட்கட்சிக்குள் எழும் எதிர்ப்புகள்; "நீங்கள் காங்கிரஸில் தொடர்வீர்களா?" – சசி தரூரின் பதில்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி...

RCB Event Stampede : 'ரசிகர்களுக்கு வேகம் தேவைதான், அதேபோல..!' – செல்வப்பெருந்தகை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் உயிரிழந்த...

Tatkal: இனி தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும்; IRCTC-ல் ஆதார் இணைப்பு வருகிறது!

ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே...