5
March, 2026

A News 365Times Venture

5
Thursday
March, 2026

A News 365Times Venture

'டெல்லி தலைமையின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.!' – பேச்சுவார்த்தை தாமதம் குறித்து செல்வப்பெருந்தகை

Date:

ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை ஓரங்கட்டிய காங்கிரஸ் தலைமை, 30 சட்டசபை தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் ஆனால், 27 சட்டசபை தொகுதிகள், 1 ராஜ்யசபா இடங்கள் மட்டுமே தர முடியும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.

திமுக – காங்கிரஸ்

இந்நிலையில் திமுகவுடன் காங்கிரஸ் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை இன்று மேற்கொள்கிறது என்று கூறப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியினர் இன்னும் அண்ணா அறிவாலயத்திற்கு செல்லவில்லை. பேச்சுவார்த்தை தாமதமாகிக் கொண்டிருக்கிறது.

திமுக – காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியிருந்த நிலையில், காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கிரிஷ் சோடங்கர் 3:50 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்துவிட்டார். அவரை வரவேற்க தான் செல்வப்பெருந்தகையும் சென்றிருந்தார்.

இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக காங்கிரஸ் குழு விமான நிலையத்திலேயே காத்திருந்தது. திமுக தரப்பில் ஒரு நம்பரை சொல்ல அதற்கு டெல்லி தலைமையிடம் ஒப்புதல் வேண்டி காங்கிரஸ் குழு காத்திருந்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தப்போது பேச்சுவார்த்தை தாமதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ” கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் அகில இந்திய தலைமையின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.

டெல்லி தலைமை அறிக்கை தந்ததும் அண்ணா அறிவாலயம் சென்று ஒப்பந்தத்தை இறுதிசெய்வோம்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

திமுக – காங்கிரஸ் கூட்டணி சுமூகமாகத் தான் இருக்கிறது. பிரச்னை எதுவும் இல்லை” என்றிருக்கிறார். தொடர்ந்து ராஜ்ய சபா சீட் குறித்த கேள்விக்கு, “இன்னும் நிறைய டைம் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

Loading…

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

இன்னும் முடிவாகாத சீட்; வேலைகளை ஜரூராகத் தொடங்கி விட்ட மநீம பிரபலங்கள்! – இவர்கள்தான் வேட்பாளர்களா?

திமுக கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றுடனும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது....

பீகார்: முதல்வர் பதவியை துறக்கிறாரா நிதிஷ் குமார்? – துணை முதல்வராகும் வாரிசு? – என்ன நடக்கிறது?

பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஜே.டி.யு...