22
June, 2026

A News 365Times Venture

22
Monday
June, 2026

A News 365Times Venture

சட்டமன்றம்: அதிமுக வெளிநடப்பு; 'மீண்டும் நடுவர் மன்றம் ஏன்?' – தமிழக அரசுக்கு எடப்பாடி கேள்வி

Date:

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று (ஜூன்.22) தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியிருக்கிறது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

கடந்த வெள்ளி கிழமையே மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் அந்த தீர்மானத்தில் தற்போது ‘ புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்’ எனத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிமுக நடப்பு

மேகதாது அணை தீர்மானத்தில் முதல்வர் விஜய் திருத்தத்தை சேர்த்தது அவை மீறிய செயலாகும் என்று எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அதிமுக சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்துவிட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “சட்டமன்ற விதிகளின்படி ஒரு திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றால், அதற்கென அரசு தனி தீர்மானம் கொண்டு வர வேண்டும்.

விதமுறைகளின்படி அவர்கள் சட்டமன்றத்தில் இந்தத் திருத்தத் தீர்மானத்தைக் கொண்டு வரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகத்தான் நாங்கள் உரிமைப் பிரச்சினை எழுப்பினோம்.

ஆனால், அதற்குச் சட்டப்பேரவைத் தலைவர் அனுமதி மறுத்துவிட்டார். இதன் காரணமாகவே அவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.

இது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உணர்வு சார்ந்த விஷயம். காவிரி நதி என்பது தமிழகத்தின் ஜீவாதார நதி. தமிழகத்தின் ஜீவநதி.

இதை நம்பித்தான் டெல்டா மாவட்ட விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் இருக்கிறார்கள். காவிரி நதிநீரை நம்பித்தான் தமிழகத்தில் 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமும் உள்ளது.

அதிமுக நடப்பு
அதிமுக நடப்பு

ஏற்கனவே காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் இதுகுறித்து ஒரு நிலையான இறுதித் தீர்ப்பை வழங்கிவிட்டன. அப்படித் தெளிவான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் இந்த வேளையில், மீண்டும் ஒரு நடுவர் மன்றம் வேண்டும் என்று இந்த அரசு கேட்பது எந்த நோக்கத்திற்காக?

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை 15 ஆண்டுகாலம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அதில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், கீழ்ப்படுகை மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல், மேல்படுகை மாநிலமான கர்நாடகா காவிரி நீரைத் தடுக்கவோ, தேக்கவோ அல்லது திருப்பி அனுப்பவோ கூடாது என்று தீர்ப்பில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

நிலைமை இப்படி இருக்கும்போது, மீண்டும் இந்த இடைச்செருகல் திருத்தத் தீர்மானத்தை இந்த அரசு ஏன் கொண்டு வந்தது என்ற விளக்கத்தைப் பெறுவதற்காகத்தான் நாங்கள் உரிமைப் பிரச்னையைக் கொண்டு வந்தோம்” என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Keir Starmer: “பதவியை விட்டு விலகுகிறேன்; ஆனால்.."- நா தழுதழுக்கப் பேசிய இங்கிலாந்து பிரதமர் கெய்ர்

பிரிட்டனில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே, அந்நாட்டுப்...

"ஆட்டமும் பாட்டமும் போதும்; ஆட்சியில் கவனம் செலுத்துங்க" – தவெக அரசுக்கு தமிழிசை கண்டனம்

சென்னை விமான நிலையத்தில் பாஜக-வின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று...

“என்னுடன் விவாதிக்க மேயர் பிரியாவுக்குத் துணிச்சல் இருக்கிறதா?" – அமைச்சர் கீர்த்தனா

தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசியில் பொதுக்கூட்டம்...

ஒரு பக்கம் பேச்சுவார்த்தை, இன்னொரு பக்கம் மிரட்டல் – அமெரிக்காவின் முரண்; வெளியேறிய ஈரான்!

ஈரான், அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த புதன்கிழமை (ஜூன் 17,...