28
April, 2026

A News 365Times Venture

28
Tuesday
April, 2026

A News 365Times Venture

கேரளம்: திருடனுக்குப் பயந்து புத்தகத்தில் மறைத்து வைக்கப்பட்ட நகை; தெரியாமல் எடைக்குப் போட்ட கணவன்!

Date:

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் தேவலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் உம்மர் குட்டி. இவர்கள் வசித்து வந்த பகுதியில் உள்ள வீடுகளில் அவ்வப்போது திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வந்தன.

எனவே, தனது வீட்டில் உள்ள நகைகள் திருடர்களிடம் சிக்காமல் மறைத்து வைக்க உம்மர் குட்டியின் மனைவி ஒரு ஐடியா செய்தார். அதன்படி, 6 சவரன் நகைகளை ஒரு டப்பாவில் போட்டு, அதைத் தனது வீட்டில் இருந்த பழைய பாடப்புத்தகங்களுக்கு இடையே மறைத்து வைத்திருந்தார்.

இதற்கிடையே, நகை வைக்கப்பட்ட டப்பா இருப்பது தெரியாமல் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி வீட்டில் இருந்த பழைய பேப்பர் மற்றும் புத்தகங்களை உம்மர் குட்டி பழைய இரும்புக்கடையில் விற்றுவிட்டார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு ஏப்ரல் 23 அன்று உம்மர் குட்டியின் மனைவி நகையைத் தேடியபோதுதான், அது பழைய இரும்பு கடைக்குச் சென்றது தெரியவந்தது. உடனடியாக பழைய இரும்பு கடைக்குச் சென்று விசாரித்தனர். உம்மர் குட்டி விற்ற பேப்பர் கட்டுகளை ஏற்கனவே குவித்து வைத்த மூட்டைகளில் போட்டுவிட்டதால், நகை டப்பா எங்கு உள்ளது என்பதை உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து உம்மர் குட்டியின் குடும்பத்தினரும், அங்கிருந்த தொழிலாளர்களும் குவித்து வைக்கப்பட்டிருந்த பழைய பொருட்களுக்கு இடையே தீவிரமாகத் தேடினர்.

நகையை தேடும் பணியில் ஊழியர்கள்

முதல் நாள் தேடுதலில் புத்தகத்திலிருந்து வெளியே விழுந்திருந்த கம்மல், வளையல் மற்றும் மோதிரம் ஆகியவை கிடைத்தன. அடுத்த நாள் நடத்திய தேடலில், புத்தகத்திற்குள்ளேயே இருந்த மாலையையும் பழைய இரும்பு கடை தொழிலாளர்கள் கண்டுபிடித்தனர்.

மொத்தம் இருந்த 6 பவுன் நகையில் 4 கிராம் தங்கம் தவிர மற்ற அனைத்து நகைகளும் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட நகைகளை கடை உரிமையாளர் நிசார், தெக்கும்பாகம் காவல் நிலையத்தில் வைத்து உம்மர் குட்டியின் மனைவியிடம் ஒப்படைத்தார்.

நகையை நேர்மையுடன் ஒப்படைத்த பழைய இரும்புக்கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளரை போலீஸார் வெகுவாகப் பாராட்டினர்.

மீட்கப்பட்ட நகைகள்
மீட்கப்பட்ட நகைகள்

இதுகுறித்து பழைய இரும்புக்கடை உரிமையாளர் நிசார் கூறுகையில், “கடந்த 21-ம் தேதி மாலை 6 மணியளவில் ஆட்டோவில் புத்தகங்கள், பழைய வாஷிங் மிஷின், தேங்காய் ஓடு ஆகியவற்றை கொண்டுவந்தார் உம்மர் குட்டி. 23-ம் தேதி 11 மணிக்கு வந்தனர்.

நாங்கள் எங்கள் வேலைகளை விட்டுவிட்டு நகைகளைத் தேடினோம். முதலில் கம்மல், மோதிரம், வளையல் உள்ளிட்டவை கிடைத்தன. கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் தங்க மாலையும் கிடைத்தது. உடனே காவல் நிலையத்துக்குச் சென்று, அங்கு உம்மர் குட்டியின் மனைவியை வரவழைத்து தங்க மாலையை ஒப்படைத்தோம். அதற்கு அவர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்” என்றார்.

மீட்கப்பட்ட நகைகள் சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ளவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

புதுக்கோட்டை: பாரம்பர்ய மரபுப்படி மீட்டெடுக்கப்பட்ட 140 ஆண்டுகால நீதிமன்ற கட்டிடம்! | Photo Album

`15 டன் கடுக்காய், 20 டன் கருப்பட்டி,180 டன் சுண்ணாம்பு'- புதுப்பொலிவுடன்...

குஜராத்: Z+ பாதுகாப்பு, கண்காணிப்புக் கோபுரம், 50 பேர் பாதுகாப்பு; இருந்தும் 'கானமயில் குஞ்சு' மாயம்

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் அபூர்வமாக...